மதுராந்தகம், ஆக. 26- அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத் தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத் தில் இணைக்கப்பட்ட சங்கங்களில் பிரதானமானது அகில இந்திய அஞ்சல் ஊழி யர்கள் சங்கம் ஆகும். குருப்.சி அஞ்சல் ஊழியர்களின் இந்த சங்கத்திற்கும், சம்மே ளனத்திற்கும் இருந்த அங்கீகாரத்தை ஒன்றிய அரசாங்கம் பறித்துள்ளது. தலை நகர் தில்லியில் விவசாய போராட்டத்திற்கு நன்கொடை அளித்ததை அரசியல் என்று கூறி ஒன்றிய ‘அரசு பழி வாங்கியுள்ளது. இந்த சூழலில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்.சி தமிழ் மாநில சங்கத் தின் 41 வது மாநில மாநாடு மதுராந்தகத்தில் ஞாயிறன்று (ஆக. 25) நடைபெற்றது. புதியநிர்வாகிகள் மத்திய சென்னை கோட்டத் தலைவராக ஆர்.செந்தில் குமார், உதவித்தலைவர்களாக வி.ராமச்சந்திரன் (கோவை கோட்டம்), என்.நெப்போலியன் (மதுரை),கே.மதி வாணன் (சிவகங்கை). செயலாளராக கே.ஜேக்கப்ராஜ் (திருநெல்வேலி), உதவிச் செயலாளர்களாக ஆர்.ரங்க நாதன்(கும்பகோணம்), ஆர்.கிரிபாலன், (திருச்சி), பி.கபில் (சென்னை வட கோட்டம்), பி.ஞானகுமார் (தூத்துக்குடி) ஆகியோரும் நிதிச்செயலாளராக வி.தென்னரசு (தர்மபுரி), உதவி மாநில நிதிச்செயலர் கே.கோபிநாத்(ஈரோடு),மாநில அமைப்பு செயலாளராக சரவணன் (தஞ்சாவூர்), ஜெகதீஸ்வரன் (நாமக்கல்), முருகேசன் (கரூர்) ஆகியோரும் தேர்வு செய்யப் பட்டனர்.