அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் பா.தேவி, மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, பொருளாளர் பூங்குழலி, ஜெ.பிரமிளா, எழுத்தாளர் ஜெ.தீபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.