ராணிப்பேட்டை, பிப்.7- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வர வேற்பு குழு அமைத்து மாநாட்டு பணிகள் தீவிரப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்ட த்தில் வெள்ளியன்று (பிப்.7) வரவேற்பு அமைப்பு குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி தலைமையில் நடை பெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.காசிநாதன், எஸ். கிட்டு, ஆர்.மணிகண்டன், தா. வெங்கடேசன், ஆ. தவராஜ் உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், வர்க்க வெகுஜன அரங்கம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.