விழுப்புரம்,செப்.25- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிபிஎம் வட்ட குழுவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது செஞ்சி வட்ட மாநாடு அ.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் கோ.மாதவன் சங்ககொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். வட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெ. பார்த்தீபன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செய லாளர் என்.சுப்பிரமணியன்,மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.முத்துக்குமரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், சகாதேவன், சிவன், சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் புதிய வட்ட செய லாளராக டபுள்யூ.ஆல்பர்ட் வேளாங்கண்ணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.