அம்பத்தூர், ஜூலை 24- ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்தவர் காளிதாஸ் (55). இவர் ஆவடி முத்தா புதுப்பேட்டையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். செவ்வாயன்று இரவு பயிற்சி மையத்தில் உள்ள 8ஆவது டவரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை கையில் வைத்திருந்த ஏகே47 ரக துப்பாக்கியால் தனக்குத்தானே தொண்டயில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் 3 தோட்டாக்கள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட காளிதாசுக்கு ஜீவஸ்ரீ என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமீப காலமாக மன அழுத்தம் மற்றும் வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொள்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராணுவம், காவல்துறை மற்றும் ஐடி துறைகளில் பணி யாற்றும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை மன அழுத்தம் மற்றும் வேலை பளு காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்றும், தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட பல்வேறு சமூக அமைப்புகளும், அரசும் விழிப்புணர்வு செய்து வரும் நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்கிறது.