districts

கவரப்பேட்டையில் தனியார் பள்ளி மூடலா? செய்தியாளர்களை தாக்க முயன்ற அதிமுக பிரமுகர்

திருவள்ளூர், ஜூன் 3- கவரப்பேட்டையில் முன்னறி விப்பின்றி தனியார் பள்ளி மூடப்பட்டதை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் பள்ளியில் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப் பேட்டை பழவேற்காடு தெருவில் உள்ளது ஆர் ஏ என் தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 154 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 54 மாணவர்கள் ஆர் டி இ எனப்படும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயின்று வருகின்றனர் . இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளியை திறப்பதற்கான எவ்வித முன்னேற்பாடு களையும் நிர்வாகம் செய்யாததால் பெற்றோர் கவலையடைந்தனர்.  அவர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து பள்ளியில் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, தனியார் பள்ளிகளின் பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர் ஐயப்பன் ஆகியோர் மாணவர்களின் பெற்றோரை சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தனர். மாணவர் சேர்க்கை முடிவடைந்த சூழலில் திடீரென பள்ளியை மூடினால் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயின்று வரும்  மாண வர்களின் நிலை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த தகவல் அறிந்து பள்ளிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை  கும்மிடிப் பூண்டியைச் சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் மற்றும் அவரது மகன் கணேஷ் ஆகி யோர் காவல்துறையினர் கண் முன்னே தாக்க முயன்றனர். ஆனால் காவல்துறையினர் பத்திரிகை யாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டதற்கு பத்திரி கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.