கடலூர், அக்.23 – மார்க்சிஸ்ட் கட்சியின் விருத்தா சலம் வட்ட 13வது மாநாடு விருத்தாசலத்தில் புதன்கிழமை (அக்.23) நடைபெற்றது.வழக்கறி ஞர் ஏ.சந்திரசேகரன் செங்கொடியை ஏற்றி வைத்தார். பி.பெரியசாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழி ந்தார். கே. எம்.குமரகுரு வர வேற்றார். மாநிலக் குழு உறுப்பி னர் எஸ். ஜி.ரமேஷ் பாபு துவக்கி வைத்தார். வட்டச் செய லாளர் ஆர். கலைச்செல்வன், கி.செல்வகுமார் ஆகியோர் வேலை அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் வாழ்த்திப் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கருப்பையின் உரையாற்றினார். சுந்தர வடிவேல் நன்றி கூறினார். ஒன்றியக்குழுக்கள் தேர்வு விருத்தாசலம் வட்டத்தை விருத்தாசலம் ஒன்றியம், கம்மாபுரம் ஒன்றியம் என இரண்டு குழுக்களாக பிரித்தனர். 13 உறுப்பினர்களை கொண்ட விருத்தாசலம் ஒன்றிய குழுவிற்கு வழக்கறிஞர் கே.எம். குமரகுரு செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 13 பேர்களை கொண்டு கம்மாபுரம் ஒன்றிய குழுவிற்கு செயலாளராக ஆர். கலைச்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் மனை பட்டா கேட்டு மனு கொடுத்த அனைத்து மக்க ளுக்கும் பட்டா வழங்க வேண்டும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், விருத்தா சலத்தில் மருத்துவ கல்லூரியை அமைக்க துவக்க வேண்டும். தோட்டக்கலை துறையை பயன்படுத்தி வேளாண்மை கல்லூரி துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.