districts

img

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு பணிகளுக்கு மடை மாற்றம் செய்யும் போக்கை கைவிடக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டார குழு சார்பில்  செவ்வாயன்று (ஆக. 22) திமிரி தேரடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் எஸ். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. சந்திரன், செயலாளர் பி. ரகுபதி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, மலை சங்கம் சேகர், விசிக நகர செயலாளர் இரா.நாகராஜன், டி. விஜயன் ஜி. மதியழகன், மு. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 100 நாள் வேலைவாய்ப்பினை 200 நாளாக உயர்த்தி தினசரி கூலி 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.