districts

img

மேல்செங்கம் பண்ணையில் வேளாண் ஆராய்ச்சி மையம் செங்கம் வட்டார மாநாடு கோரிக்கை

 திருவண்ணாமலை, அக். 20 – மேல் செங்கம் விவசாய பண்ணையில் வேளாண்மை ஆராய்ச்சி மையம் துவக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் வட்டார மாநாடு   கோரிக்கை விடுத்துள்ளது.     செங்கம் வட்டார 9 ஆவது மாநாடு ஞாயிறன்று (அக்.20) செங்கத்தில் நடைபெற்றது.  மாநாட்டு கொடியை ஆர்.ஆறுமுகம் ஏற்றினார். எம்.சரவணன் வரவேற்றார், பி.கணபதி அஞ்சலி தீர்மானம் வாசித்தார், சி.எம். பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை வட்டார செயலாளர்  ஏ.லட்சுமணன் வாசித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வாசுகி வாழ்த்தி பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் நிறைவுரையாற்றினார். தீக்கதிர் விநியோகம் செய்யும், செங்கம் எம்.சரவணன், இறையூர் எம்.ஏழுமலை, காஞ்சி எஸ்.நவாப்ஜான் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.   எம்.கண்ணன்  நன்றி கூறினார்.   இடைக்குழுதேர்வு 9 பேர் கொண்ட செங்கம் வட்டார செயலாளராக பி.கணபதி தேர்வு செய்யப்பட்டார். செங்கம், புதுப்பாளையம், காஞ்சி, மேல் பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க வேண்டும், செங்கத்திலிருந்து ஜமுனாமரத்தூர் பகுதிக்கு பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும், மக்களிடம் கொள்ளையடிக்கும் கரியமங்கலம் டோல்கேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.