சென்னை, டிச.20- விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கோவில் நிலம் ஏலம் விடுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் 156 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 80 ஏக்கர் நிலத்தில், அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்களை விவ சாயிகளுக்கு குத்தகைக்கு மறு ஏலம் விட வியாழ னன்று (டிச.19) இந்து அற நிலையத் துறை அதிகாரி கள் ரங்கநாத பெரு மாள் கோவிலுக்கு வந்த னர். நிலத்தை ஏலம் விடு வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்நிகழ்வில் நிலத்தை பயன்படுத்தி வருகிறவர்கள், ஏலம் எடுக்க விரும்புகிறவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, நிலத்தை பயன்படுத்த வரும் விவசாயிகள், நான்கு தலைமுறைகளாக கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, தற்போதுள்ள விவ சாயிகளின் அனுமதி இல்லா மல் நிலத்தை எப்படி ஏலம் விடலாம் என வாக்கு வாதம் செய்தனர். ஏலத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் தலைமையில் கோவில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சங்கர் நகர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஏலம் விடுவதை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.