திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட அலுவலர் சாந்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் இல.ரவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணபதி, கலசபாக்கம் வட்டாட்சியர் முனுசாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.