திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி, திருவீதியம்மன் நகர், வள்ளுவர் நகர், முல்லை நகர் வி.பி. நகர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை ,ஆடைகள், பால் பவுடர் ஆகியவற்றை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வழங்கினார். இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிக்குழு உறுப்பினர் வெங்கடைய்யா, கிரிஜா நகர் செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.