கடலூர், ஜூலை 20- தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சமீபத்தில் பொறுப்பேற்ற டேவிட்சன் தேவாசீர்வாதம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வு மேற்கொண்டார். மூன்று மாவட்டத்திற்கும் சவாலாக இருக்கும் புதுவை மாநில மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மூன்று மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைகள் குறித்தும், சாதி மோதல்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.கள்ளச்சாராய விற்பனை மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. புகார் அளிக்க வரும் பொது மக்க ளிடம் காவலர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறி வுறுத்தப்பட்டது.