மாணவி கீர்த்தனாவின் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை
மாணவர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, செப். 10- பள்ளி மாணவி கீர்த்தனாவின் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வடசென்னை மாவட்டத் தலைவர் காவ்யா, செயலாளர் நிதிஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு வணிகவியல் படித்து வரும் மாணவி கீர்த்தனா கடந்த ஆகஸ்ட் 19அம் தேதி அன்று மாலை நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு மர்மான முறையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் போது மாணவியின் புத்தக பையில் தனது மரணத்திற்கு பொருளியல் ஆசிரியையே காரணம் என்று குறிப்பிட்டு மாணவியின் கைப்பட எழுதப்பட்ட கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடித்தை வைத்து பள்ளிக்கு சென்று விசாரித்த காவல்துறை பள்ளி மாணவி படிக்கும் வகுப்பறையின் சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரித்த போது மாணவியின் கையெழுத்தை வைத்து தொடர்ந்து அந்த மாணவியை பொருளாதார ஆசிரியை சக மாணவர்கள் முன்னிலையில் கேலி செய்தது தெரிய வந்துள்ளது. 19ஆம் தேதி மாணவி கீர்த்தனாவை தகாத வார்த்தைகளால் அவமானபடுத்தியதில் மனம் உடைந்து மாணவி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். மேலும் மாணவி கீர்த்தனாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறையினர் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாணவியின் பெற்றோர் மற்றும் அவர்களின் வழக்கறிஞரை தொடர்ந்து அலைகழித்து வருகின்றனர். மாணவியின் தற்கொலை நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் தற்போது வரை மாணவியின் மரணத்திறகு காரணமானவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது காவல் துறையினரின் மெத்தன போக்கை காட்டுகிறது. மாணவி கீர்த்தனாவின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக காவல் துறை கைது செய்ய வேண்டும். மாணவி கீர்த்தனாவின் மரணத்தால் மனம் உடைந்து வாழும் மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தொடரும் பள்ளி மாணவிகளின் மர்ம மரணத்தை தடுக்க அரசும், பள்ளி கல்வித் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: மக்கள் நீதிமன்றத்தில் 3,172 வழக்குகளுக்குதீர்வு
திருவள்ளூர், செப்.10- திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர். திருவொற்றியூர். பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப் பூண்டி மற்றும் மாதவரம் தாலுகா நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்கு கள் குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலு வையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வு கள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலை வருமான எஸ்.செல்வ சுந்தரி பங்கேற்று தொடங்கி வைத்தார். இம்மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3070 வழக்குகள் முடிக்கப்பட்டது. ரூ.19 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரத்து 829 தீர்வு காணப்பட்டது. நிலுவையில் அல்லாத 102 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 102 வழக்குகளும் முடிக்கப்பட்டு ரூ.75 லட்சத்து 45 ஆயிரத்து 431 தீர்வு காணப்பட்டது. 6453 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3172 வழக்கு கள் முடிக்கப்பட்டு ரூ.20 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 260 இழப்பீடு தீர்வு காணப்பட்டது. பொன்னேரி முதன்மை சார்பு நீதி மன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ண சாமி, முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கரன் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் முன்னிலை வகித்தனர். இதில் நிலுவையில் இருந்த 512 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 1 கோடியே 83 லட்சத்து 21ஆயிரத்து156 இழப்பீடு வழங்கபட்டன. பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோலில் தண்ணீர்: மக்கள் புகார்
ஆவடி,செப் ,10- ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. மழை காரண மாக பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் டேங்கிற்குள் தண்ணீர் கசிந்தது. இதனை அறியாமல் வழக்கம் போல் வாகனங்களுக்கு ஊழி யர்கள் பெட்ரோல் நிரப்பினர். சிறிது தூரம் சென்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழு தாகி நின்றன. தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்டதால் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
விவோ வி29இ: வாடிக்கையார்கள் வரவேற்பு
சென்னை, செப்.10– விவோ நிறுவனம் விவோ வி29இ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள மிக மெல்லிய ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பயனரின் பணிச்சூழலுக்கு ஏற்ற வகையில் சிறப்பான அனைத்து தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது. மிக மெல்லிய தோற்றத்தில் 3டி வளைந்த டிஸ்பிளே, 50எம்பி ஐ ஏஎப் செல்பி கேமரா. இரவு நேரங்களில் படங்களை துல்லியமாக எடுக்கும் வகையிலான 64எம்பி ஓஐஎஸ் ஆகியவை இதன் சிறம்பம்சங்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் 26,999 ரூபாய்க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டுடன் 28,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
ஒரு வயது குழந்தைக்கு 12 மிமீ சிறுநீரக கற்களை அகற்றி சாதனை
சென்னை,செப்.10- சென்னையில் உள்ள ஏசியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU) மருத்துவமனையில் 1 வயது குழந்தையின் சிறுநீரகத்தில் இருந்த 12 மிமீ சிறுநீரகக் கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இத்தகைய அறுவை சிகிச்சை தென்னிந்தியாவில் முதல் முறையாக நடை பெற்றுள்ளது. வெற்றிகரமான சிகிச்சை யின் மூலம் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கியமான மைல் கல்லை நம் தமிழ்நாடு எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திடீரென குழந்தை சிறுநீர் கழிக்கும் போது ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு தீராத வலி இருந்து வந்தது. பிறகு அந்த குழந்தை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டன. அந்த படங்க ளின் படி, இடது சிறுநீரகத்தில் கணிசமான அளவில் 12 மிமீ அளவில் சிறுநீரக கல் இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப் பட்ட குழந்தை சிறு வயது என்பதால் இது மருத்துவர்களுக்கே மிகப்பெரிய சவாலாக அமைந்தது. எனவே மருத்துவர்களும் நிபுணர் குழுவினரும் ஆலோசனை நடத்தி மருத்துவர்கள் அருண் குமார், வெங்கட சுப்ரமணியம், குழந்தை சிறுநீரக தடவியல் மருத்துவர் டாக்டர் ரமேஷ் பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர் குழந்தைக்கு லேசர் சிகிச்சையை மேற்கொண்டனர். இதுகுறித்து மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநரும், சிறுநீரகவியல் மூத்த ஆலோசகருமான டாக்டர் அருண் குமார் கூறுகையில், பாதிக்கப்பட்ட குழந்தை ஒரு வயது குழந்தை என்பதால் கவனமாக கையாள வேண்டியிருந்தது. குழந்தையின் சிறுநீரகத்தின் பின்பகுதியில் ஒரு சிறிய துளை போட்டு அதி நவீன லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு சிறு நீரக கல்லை துண்டு துண்டாக பிரித்து வெளியேற்றினோம் என்றார்.
விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
பொன்னேரி, செப்.10- பொன்னேரி விநாய கர் சதுர்த்தி விழா வரு கிற 18-ந்தேதி கொண்டாடப் படுகிறது. பொன்னேரி பகுதியில் மட்டும் 55 விநாயகர் சிலை கள் பொது இடத்தில் வைக்க அனுமதி வழங்கப் பட்டு இருக்கிறது. இந்நிலை யில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் அதனை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக போலீசார் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகளி மண்ணால் செய்யப்பட்டி ருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில்தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகள் 5 நாட்களுக்குள் குறிப்பிட்ட இடத்தில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க அனு மதிக்கப்பட்ட வழித்தடங்க ளில் எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க மினி லாரி டிராக்டர் ஆகிய வற்றை பயன்படுத்த வேண்டும். மாட்டுவண்டி, மீன்பாடி வண்டி, ஆட்டோக்க ளில் எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தி யுள்ளனர்.
100 ஆண்டுகள் ஆனாலும் சனாதனம் பற்றி பேசுவோம்: உதயநிதி ஸ்டாலின் கடலூர் செப்.10- இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை பற்றி உரக்க பேசுவோம் என்று திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் இல்ல திருமண விழா நெய்வேலியில் நடைபெற்றது. அதில் பங்கேற்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி போல் ஒற்றுமையோடு மணமக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். சனாதனம் பற்றி நான் இன்று பேசவில்லை. 200 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இன்னும் 100 ஆண்டு கள் ஆனாலும் பேசுவோம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். நான் பேசியதை திரித்து இந்து மதத்திற்கு எதிராக பேசி வருவதாக, ஒன்றிய அமைச்சர்கள் பேசுகிறார்கள். ஜனநாயக படுகொலை மணிப்பூரில் நடக்கிறது. இதை முடி மறைத்து சனாதனம் பற்றி தவறாக பேசி வருகிறார்கள். இதை முறியடிக்க வேண்டும். பாஜகவை ஒழிக்க அதனுடைய அடிமை களான அதிமுகவை அகற்ற வேண்டும். 9 ஆண்டுகளாக ஆட்சியில் இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்று மோடி கூறி வந்தார். ஆனால் தற்போது இந்தியாவின் பெயரையே மாற்றியுள்ளார். இதுதான் அவர் இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்று கூறி வந்ததன் அர்த்தமா என்று கேள்வி எழுப்பினார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை எப்படி தோற்கடித்தோமோ அதே போல் நாடாளுமன்றத்திலும் பாசிச பாஜக ஆட்சியை தோற்கடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
விழுப்புரம்,செப்.10- விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நாட்டார்மங் கலத்தில் மார்ச் 7 அன்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பை யும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக் குறைவாகவும், அவ தூறாகவும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிர மணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை அக்டோபர் 9 ஆம் தேதி நடை பெறும் என்றும், அன்று சி.வி.சண்முகம் நீதி மன்றத்தில் நேரில் ஆஜ ராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பேனர் உயிரிழப்புகளை வேடிக்கை பார்க்கும் புதுச்சேரி அரசு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
புதுச்சேரி, செப். 10- புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், புதுச்சேரி ஆளும் என். ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சியினர் தடையை மீறி புதுச்சேரி யில் பேனர் வைப்பதையும் அதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; புதுச்சேரி மாநிலத்தில் மக்களின் வாழ்க்கை தரம் படிப்படியாக கீழ் நோக்கி செல்கிறது. ரேசன் கடை திறக்கப்படவில்லை, மின்கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது, இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற எந்த திட்டமும் இல்லை. பஞ்சாலைகள் மூடி கிடக்கின்றன. தெருவுக்குத் தெரு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விவ சாயிகளும் நிம்மதியாக இல்லை. இப்படியாக புதுச்சேரி மக்களின் பிரச்சினைகள் தீவிரமடைந்து வரும் இந்த சூழலில் இவைகளுக்கு தீர்வு காண வேண்டிய ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சனைகளை திசை திருப்பு கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தனது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக ஏராளமான பேனர்களை சாலைகளை மறித்து வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி சதுக்கத்தில் வைக்கப்பட்ட பேனர் சாலைகளை மறித்து வைக்கப்பட்ட தால் எதிரே வந்த வாகனம் தெரி யாமல் ஏற்பட்ட விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நடராஜன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விபத்திற்கு காரணமான பேனர் வைத்த அமைச்சர் நமச்சி வாயம் மற்றும் பேனர் வைக்க அனு மதித்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த நட ராஜன் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் இழப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேட்டுக்கொள்கிறது. இதுபோன்ற மரணங்கள் நிகழ்வு இது முதல் முறை அல்ல கடந்த வாரம் ரெட்டியார்பாளையம் பகுதி யில் அமைச்சர் நமச்சிவாயம் பேனர் வைக்கப்பட்ட இடத்தில் பொதுப்பணி துறையினர் சாலை அமைக்காமல் சென்ற சம்பவமும், நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதி சாலையின் நடுவில் அவரின் மற்றோரு பேனர் திடீரென தீப்பற்றி எரிந்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதும் நடை பெற்றது. இப்படித் தொடர்ந்து புதுச்சேரி மக்களின் உயிருக்கும், உடை மைக்கும் ஆபத்து விளைவிக்கும் பேனர் வைப்பதற்கு ஏற்கெனவே விதிமுறைகளும், சட்டமும் இருந்தபோதிலும் அதனை மக்களின் மீது எந்த அக்கரையும் இல்லாத ஆளும் கட்சி தொடர்ந்து மீறி வருகிறது. அதே வேலையில் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக அரசின் அவலங்களை அம்பலப் படுத்துவதற்காக வைக்கப்படும் சிறிய தட்டிகள் கூட சட்டத்தைச் சொல்லி உடனே அகற்றப்படுகிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமும் அதிகார வர்க்கத்தின் ஆணவமே காரணமாக இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேனர்கள் வைப்பதால் பல்வேறு பாதிப்புகளை புதுச்சேரி மக்கள், சிறு வணிகர்கள் சந்தித்து வருகின்றனர். எனவே சாலையோரம் மற்றும் சாலை தடுப்பு சுவரில் பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பேனர் வைப்பதற்கு உடந்தை யாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயி ரிழந்த நடராஜன் குடும்பத்தற்கு ரூ50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புதுச்சேரி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
அரசு பேருந்தில் கேட்பாற்ற மது பாட்டில்கள்
விழுப்புரம்,செப்.10- விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அரசு பேருந்தில் போலீசார் சோதனையில் கேட்பாறற்று கிடந்த மது பாட்டில் போலீசார் பறிமுதல் செய்தனர். புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு பேருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை இரவு புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்து திண்டிவனத்தை கடந்து செஞ்சி நோக்கி சென்றது. அப்போது செஞ்சி கூட்ரோடு அருகில் காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் பேருந்தை நிறுத்தினர். உள்ளே சென்ற போலீசார் பயணிகளின் பைகளை சோதனையிட்டனர். அப்போது, பேருந்தில் பயணிகளின் பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. இதனை திறந்து போலீசார் சோதனையிட்டனர். அதில் 30 குவார்ட்டர் மதுபான பாட்டில்களும், 10 புல் மதுபாட்டில்களும் இருந்தது. இந்த பை யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். எங்களுடையது இல்லை என பயணிகள் அனைவரும் கூறிவிட்டனர். இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தினர்.
பிரதமர் குடியிருப்பு திட்டம் குறைகளை தெரிவிக்கலாம் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ராணிப்பேட்டை, செப். 10 – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ராணிப்பேட்டை மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியாக கோ. கோபிநாத் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பொது மக்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியான கோ. கோபிநாத், 95859 33371 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பாக ஏதாவது புகார் அளிக்க விரும்பினால் புகார் மனுக்களை மாவட்ட குறை தீர்க்கும் அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, இராணிப்பேட்டை என்ற முகவரி, ombudsperson.rpt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தெரிவித்துள்ளார்.