districts

விடுமுறை அளிக்காத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை, ஆக. 17-

     திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் திரு வண்ணாமலை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையிலான தொழி லாளர் உதவி ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) திடீர்  ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது, சட்டப்படி பணியாளர்க ளுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமல், மாற்று விடுமுறை அளிக்காமல் பணி யாளர்கள் பணிக்கு அமர்த்திய 32 நிறு வனங்கள், 32 ஹோட்டல்கள், 1 மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 65 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு உரிமையாளர்கள் மீது தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.