திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் டச் அகாடமி பள்ளி இயங்கி வருகிறது. இதில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சென்னை திருநின்றவூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டனர். இந்தப் பள்ளியின் 12 மாணவர்கள் முதல் மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்கள் பொன்னேரி வட்டாட்சியர் சிவகுமாரை சனிக்கிழமையன்று (பிப் 22), சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாரதி,பள்ளி தலைமை ஆசிரியை டெய்சி ராணி, சிலம்ப பயிற்சியாளர் சேகர் ஆகியோர் அருகில் இருந்தனர்.