கிருஷ்ணகிரி,ஜூலை27-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறி வியல் இயக்கம், பிஎம்சி டெக் கல்வி குழுமம் இணைந்து நடத்திய 12 வது ஓசூர் புத்தகத் திரு விழாவில் சுமார் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
ஓசூர் 12 வது புத்தகத் திரு விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் கிருஷ்ணகிரி புதுக்குரல் கலைக்குழு நிகழ்ச்சிகளுடன் துவங்கி யது.
தலைவர் அறம்.கிருஷ்ணன், பொருளாளர் கண்மணி,துணைத் தலை வர் நீலகண்டன், இணைச் செயலாளர் அரிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கி ணைப்பாளர் முனைவர் சேதுராமன் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா வாழ்த்திப் பேசி னார். புத்தகத் திருவிழா மதிப்புறு தலைவர் முனைவர் வணங்காமுடி 2024 ல் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா தேதியை வெளியிட்டார்.
அப்போது, 13 வது ஓசூர் புத்தகத் திருவிழா 2024 ஆம் ஆண்டு ஜூலை 12 முதல் 23 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடை பெறும் என்றார். அதற்கான இணையதளம் வெளியிடப்பட்டது . இந்த ஆண்டு ஜூலை 14 முதல் 25 வரை 12 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழாவில் 110 அரங்கு கள் அமைக்கப்பட்டி ருந்தன. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம், ஆங்கிலம், இந்தி, மொழிகளிள் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. பொன்னியின் செல்வன், வேள்பாரி நாவல் அதிகம் விற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
களைகட்டிய திருவிழா
இந்த புத்தக திரு விழாவையொட்டி, தினமும் பேச்சாளர்கள், படைப்பாளர் கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்,கலைப் போட்டிகள் புத்தக வெளி யீடுகள் என களை கட்டி யது.
25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு,தனியார் பள்ளி மாணவர்களும், ஒரு லட்சம் பொதுமக்களும் புத்தக விழாவை கண்டு களித்துள்ளனர்.
புத்தக வாசிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை கேற்ப 13 வது புத்தக திருவிழா வில் பொறியியல், தொழில் நுட்பம், தொழில் முனை வோருக்கான புத்தகங்கள், காபி டேபிள் போன்ற விலை உயர்ந்த புத்தகங்கள்,அரசு அலுவலர்கள் தேர்வு களுக்கு தயார் படுத்தும் புத்தகங்கள் இடம் பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் கூறினார்.
புதுகை பூபாளம் கலைக் குழுவின் நையாண்டி தர்பார், பிரகதீஸ்வரன் குழு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.