districts

img

30 நிமிடத்தில் சிலம்பத்தில் அனைத்து கலைகளையும் செய்து சாதனை!

செங்கல்பட்டு, ஆக. 29- கல்பாக்கம் அடுத்த சதுரங்க பட்டினம் கடற்கரையில் சர்வதேச ஆசான் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கலை கூடம் உள்ளது. உலக சாதனை முயற்சியாக  குளோபல் உலக சாதனை அமைப்பின் அலுவலர் ராஜேஷ்குமார் முன்னிலையில்  100 க்கும் மேற்பட்ட 3 வயது முதல் 20 வரை உள்ள மாணவர்கள் 30 நிமிடத்தில் நடுகம்பு வீச்சு, இரட்டைகம்பு வீச்சு வேல்கம்பு, தராசு பந்தம், நெடுகம்பு அடிமுறை ஆகிய போர் முறை விளையாட்டு  கலைகளை செய்து காண்பித்தனர். உலக சாதனை படைத்த ஆசான் தற்காப்பு கலையின் முயற்சியை பாராட்டி 30 நிமிடத்தில் தற்காப்பு கலையில் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை ஆசான் தற்காப்பு கலைகூடத்தின் நிறுவன தலைவர்  என்.டி. அசோக்குமார் மற்றும் கலைகூட தலைமை புரவலர்  மல்லை சத்யா  ஆகியோரிடம் குளோபல் உலக சாதனை  அலுவலர் ராஜேஷ்குமார் வழங்கினார்.  தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும்  விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற சென்னை அணுமின் நிலைய இயக்குநர் எம்.சேஷய்யா, திருக்கழுகுன்றம் பேரூராட்சி  மன்ற தலைவர் பொறியாளர் யுவராஜ் துரை, ஒன்றிய துணை சேர்மன் பச்சையப்பன்,   சென்னை அணு மின் நிலையத்தின் தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்க பொதுசெயலாளர் அ.கருணாமூர்த்தி, முன்னாள் சேர்மன் வாசு, ஒன்றிய கவுன்சிலர்  நூர்ஜஹான் பாலு உள்ளிட்டோர் மாணவர் களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்தினர்.