districts

img

50 ஆண்டு அனுபவ நிலத்தை அபகரிக்கும் முயற்சி

கிருஷ்ணகிரி,செப்.28- கிருஷ்ணகிரி மாவட்டம், சூள கிரி வட்ட சிபிஎம் செயலாளர் எஸ். முனியப்பா. இவரது அனுபவத்தில் விவசாயம் செய்து வந்த நிலத்தை சமூக விரோதிகள் போலி பத்திரம் பதிவு  செய்து அபகரிக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு காவல் மற்றும் வருவாய்த்துறையினர் உடந்தையாக இருந்து வரு கின்றனர். இதுகுறித்து குறித்து எஸ்.முனியப்பா பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுக் கொள்ளவில்லை. இதுபற்றிய விவரம் வருமாறு:- முனியப்பா குடும்பம் பாகப்பிரி வினை செய்து போது தம்பி நாக ராஜூக்கு 93 சென்ட் நிலம் கொடுக்கப் பட்டது. அப்போது முனியப்பா தனக்கு வேறு ஒரு இடத்தில் பாகம் வந்த நிலத்தை ஊர் பெரிய வர்கள் முன்னிலையில் நாக ராஜூக்கு கொடுத்துள்ளார். அதற்கு மாற்றாக அருகில் இருந்த  நாகராஜ் தனது நிலத்தை கொடுத்துள்ளார். அன்று முதல் முனியப்பாவின் அனுபவத்தில் இருந்து வருகிறது.  இந்நிலையில், பாகப்பிரிவினை யின் போது  ஒதுக்கப்பட்ட 94 சென்ட் நிலம் நாகராஜ் பெயரி லேயே இருந்துள்ளது. நாக ராஜ் மரணமடைந்த பிறகு, அவ ரது மனைவி சாந்தம்மா முனியப்பாவுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பெங்க ளூரு பார்வதிக்கு விற்பனை செய்துள்ளார்.  விலைக்கு வாங்கிய பார்வதி என்பவர் அந்த நிலத்தை யுவராஜ் என்பவரிடம் குத்தகைக்கு விட்டுள்ளார். அவர், அந்த அப கரித்து தனக்கு சொந்தமாக்கி கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது நில உரிமையாளர் எஸ்.முனியப்பா தடுத்துள்ளார். இத னால், ஆத்திரமடைந்த யுவராஜ் அடி யாட்களுடன் வந்து முனியப்பாவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அபகரித்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.  இந்த சம்பவங்கள் குறித்து நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தியும் பாகலூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 5 ஆம் தேதியும், இம் மாதம் 9 ஆம் தேதியும் முனியப்பா புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட முனியப்பாவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டு  காவல்துறையினர் நில அபகரிப்பு செய்து தாக்குதல் நடத்திய யுவராஜ் மற்றும் குண்டர்களுக்கு  ஆதர வாக செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து சூளகிரி காவல் துறை, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் போலி பத்தி ரம் பதிவு செய்து நிலத்தை அப கரிக்க முயற்சி செய்து வரும் பெங்களூருவை சேர்ந்த யுவராஜ் மற்றும் குண்டர்கள் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போலி பத்திரத்தை ரத்து செய்தும் தாக்குதலுக்குள்ளான முனியப்பாவுக்கு நீதி வழங்க வேண்டியும் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகரச் செயலாளர் சி.பி. ஜெயராமன் தலை மையில் நடைபெற்றது மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செய லாளர் ஜி.கே.நஞ்சுண்டன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், பிரகாஷ்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், செயலாளர்கள் சூளகிரி எஸ்.முனியப்பா, ஓசூர் ராஜா ரெட்டி,  அஞ்செட்டி தேவராஜ், கெலமங்கலம் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஓசூர் சாராட்சியர் சரண்யா உறுதியளித்தார்.