சென்னை, ஆக. 14- விபத்தில்லா சென்னை என்ற தலைப்பில் ஆக 5 முதல் சென்னை பல்வேறு பகுதிகளில் கருத்தரங்கம், நாடகம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை நடத்தி வரு கிறது. அதன் ஒருபகுதியாக திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனையுடன் இணைந்து கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆகாஷ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ.செல்வராஜ குமார் தலைமை தாங்கி பேசுகையில், போக்கு வரத்து விதிகளை மதித்தால் விபத்துகளை குறைத்து விடலாம், மேலும் பெற்றோர்கள் குழந்தை களுக்கு உயர்ரக இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி கொடுப்பது அவர்க ளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்யுங்கள் என்று வேண்டு கோள் விடுத்தார். இறுதியில் விபத்தி ல்லா சென்னையை உரு வாக்குவோம் என அனைவ ரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவ முத்து அழகிரி, டாக்டர் ராஜராஜன், உதவி ஆய்வாளர் பொன்.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.