கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் பாலு பச்சையப்பன், பொது செயலாளர் பி.வெங்கடேசன், வட்டாட்சியர் பலராமன், தேர்தல் துணை தாசில்தார் சந்திரன், சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், ஆலோசகர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.