சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள்
சென்னை, அக். 3- சென்னை புறநகர் மின்சார ரயிலில் விரைவில் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான தனிப் பெட்டி கள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் வழித்தடத்தை மாநில அரசிடம் முழுமையாக ஒப்படைக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே மேலாளர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலைய தரத்தில் மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் பரிந்துரையின் பேரில், புறநகர் ரயில்களில் இரண்டு அல்லது மூன்று குளிர்சாதன பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இன்னும் 6 மாதங்களில் பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை முறை ஓட்டம் தொடங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது மெட்ரோ ரயில் சேவை இல்லாத பல்வேறு பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால், குளிர் சாதன பெட்டிகளில் பயணம் செய்ய விருப்ப முள்ளவர்களுக்கு இத்திட்டம் வசதியாக அமையும். இதனால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கும்.
12 மணி நேரம் இடைவிடாமல் செஸ் விளையாடிய 6 வயது அர்ஜுன்
சென்னை, அக்.3- மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மிஷன் சீனியர் செகண்டரி பள்ளியில் 1ம் வகுப்பு மாணவர் அர்ஜுன் சீனிவாசன். ப.வெங்கடராகவன்- தீபா சதாசிவம் தம்பதியின் மகனான இவர் முதலில் தந்தையோடு களமிறங்கினார். சாதனை படைக்கும் பயணத்தை செவ்வாயன்று காலை 8.30 மணியளவில் துவக்கினார். 76 வீரர்கள் இவரோடு மோதுகின்றனர். 12 மணி நேரம் தொடர்ந்து செஸ் விளையாட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்நிகழ்வு துவக்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைவர் கோகுலம் கோபாலன், விஜயன் உதயகுமார் (துணைத் தலைவர்), டி.டி.ராஜன் (பொருளாளர்), தீபக் தேவராஜன் (செயலாளர்), எஸ்.ஜெயலட்சுமி (முதல்வர்) ஆகியோர் பங்கேற்றனர்.
ஓசூர் 31-வது வார்டு பகுதிகளில் மேயர் சத்யா ஆய்வு
ஓசூர், அக்.3- ஓசூர் மாநகராட்சி 31-வது வார்டுக்குட்பட்ட இமாம் பாடா, தாசர பேட்டை, ஏழு வீதி தெரு, ராஜூ வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.3.86 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தரம், அதன் உயரம், அகலம் குறித்து மக்களுக்கு தேவையான கழிவுநீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? எனவும் அவர் கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்களின், குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வெடிகுண்டு வீசிய ரவுடியை பிடிக்க தனிப்படை அமைப்பு
விழுப்புரம், அக்.3- கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடியை பிடிக்க கூட்டாளிகளிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறை தனிப்படையும் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள கண்டம் பாக்கத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. ரவுடியாக அறியப்பட்ட இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், அவர் மீது புகார் கொடுப்பவர்கள் மிரட்டி திரும்பப் பெறச் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த 5 பேரை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது நாட்டு வெடிகுண்டு வீசியதில் பரணிதரன் (22) படுகாயமடைந்தார். மற்ற 4 பேர் அங்கிருந்து சிதறி ஓடினர். ஆனால், அந்த ரவுடி நாராயணசாமி அங்கிருந்து தப்பியோடி விட்டார். சிறிது நேரம் கழித்து ரயில் நிலையத்திற்குள் பீதியில் வந்த பயணிகள் ஒரு சிலர் படுகாயமடைந்த பரணிதரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் காவல்துறையினர் ரயில் நிலையத்திற்கு சென்றனர். பிறகு, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைத்தனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று பரணிதரனிடம் விசாரணை நடத்தினர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாராயண சாமியுடன் தொடர்பில் இருந்த கூட்டாளிகள் 3 பேரை பிடித்தனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடிய ரவுடி நாராயணசாமியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சமீபகாலமாக விழுப்புரம் நகரப் பகுதியில் ரவுடிகள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அக்.2 விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி,அக்.3- காந்தி பிறந்த நாளன்று கடைகள்,உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் ஊதியத்துடன் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடாஜலபதி செய்தி வெளியிட்டிருந்தார். விடுமுறை அளிக்கப்படாத பட்சத்தில், அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது இரு நாள் விடுப்பு அனுமதித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளித்து, அதன் நகலை தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் அதனைக் காட்சிக்கு வைக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கடைகள், உணவகங்கள் என் பல நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்ட விதிமுறைகளை பின்பற்ற 65 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலைக்கு முதல்வர் வருகை: அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை, அக்.3- திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்மாத இறுதி யில் வருகை தருகிறார். அதை ஒட்டி விழா நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், இம்மாத இறுதி வாரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். விழா நடைபெறும் அதிகாரப்பூர்வமான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரி கிறது. மாநில அளவிலான 3 நாட்கள் நடை பெறும் வேளாண் கண்காட்சி திருவண்ணா மலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முதல்வர் திறந்து வைத்து பார்வை யிட உள்ளார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், திருவண்ணாமலையில் மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட மாவட்டத்தை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறு வதற்கான ஆயத்த பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு நகரப் பேருந்து அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
ராணிப்பேட்டை,அக். 3 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ். ஜோசப் கென்னடி தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் ஆர். பாபு வரவேற்புரை வழங்க, மாநில பொருளாளர் மு.பாஸ்கரன் துவக்க உரை யாற்றினார். மாநிலச் செய லாளர் ஆ. அம்சராஜ் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆ. செல்வகுமார் செயலாளர் அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் எழில் இளம்வழுதி நிதி நிலை அறிக்கை முன் வைத்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாநில செயலாளர் டி. குப்பன், மாநிலத் தலைவர் அ. சேகர் வாழ்த்துரை வழங்கி னர். தீர்மானங்கள் சத்துணவு ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வேலை நாட்களில் வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர் ஆகிய இடங்களில் இருந்து நகர பேருந்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள் சார்பில் தூய்மை பணி
சென்னை, அக்.3- தூய்மை பாரதம் இயக்கத்தில் பங்கேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை தூய்மை செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.இதைத்தொடர்ந்து ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதியமான் பப்ளிக் பள்ளி, அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரியில் பாரத சாரண, சாரணியர்கள், குருளையர் மற்றும் நீலப்பறவையார், ஜூனியார் ரெட் கிராஸ் மாணவர்கள், யூத் ரெட் கிராஸ் மாணவிகள் மற்றும் ஆசிரியார்கள், பேராசிரியார்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஊத்தங்கரை 4 முனை சந்திப்பு, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், கல்லாவி சாலை, காவல் நிலையம், பழைய கடைவீதி மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளை அவர்கள் சுத்தம் செய்தனர். அதைத்தொடர்ந்து மாணவர்க ளிடையே, தூய்மையின் நோக்கம் மற்றும் அதன் நன்மைகளை பற்றி அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் சிறப்புரையாற்றினார்.