districts

சென்னை முக்கிய செய்திகள்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி காலியிடங்கள் திடீர் குறைப்பு

சென்னை,ஆக.17- தமிழநாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் ஒருங் கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் (டிப்ளமா, ஐடிஐ கல்வித்தகுதி) காலியிடங்களின் எண்ணிக்கை  730 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எண்ணிக்கை  குறைக்கப்பட்ட பதவிகளின் விவரம் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், கடந்த ஜூலை 26-ம் தேதி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகள் தேர்வுக்கான (பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி) அறிவிப்பில் 654 காலியிடங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 605 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பதவிகளில் காலி யிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட வில்லை.இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 24-ம் தேதி முடிவடைகிறது. இரு தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளிலும் காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காலியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உள்பட்டது என்ற போதிலும் பொதுவாக காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே வழக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக தற்போது காலியிடங் களின் எண்ணிக்கை குறைந்திருப்பது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட  வழக்கில் 3 ரவுடிகள் கைது

சென்னை, ஆக.17- சோழவரம் கோட்டைமேடு கென்னடி தெரு சேர்ந்தவர் ஜெகன் (38). ரியல் எஸ்டேட் தொழில் நடத்திவரும்  இவரது  மனைவி அபிஷா பிரியா வர்ஷினி (33), சோழவரம் ஊராட்சி  துணைத் தலைவராக உள்ளார்.  வியாழனன்று 2 பைக்குகளில் வந்த 5 பேர் இவர்களின்  வீட்டில, நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பின்னர் வீட்டின்  வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை யும் உடைத்து, வீட்டுக்குள் சென்று அங்கிருந்த கார் கண்ணாடியும் உடைத்து, கதவு ஜன்னல்களையும் கத்தியால்  சேதப்படுத்திவிட்டு மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி சென்றனர்.  இதேபோல் சோழவரம் பைபாஸ் சாலை லாரி பார்க்கிங்  பகுதிக்கு சென்று நாட்டு வெடிகுண்டு வீசி, அங்கிருந்த சோழவரம் அம்பேத்கர் நகரை  சேர்ந்த சிவா (40) என்பவரின்  கையை  கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சோழவரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரித்தனர். பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் அஜித்குமார் (29),  நித்தீஸ்வரன் (19) ஆகிய இரண்டு பேரை  பிடித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் பிரபல ரவுடிகளை பிடிக்க செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலை யில் ஆந்திராவில் பதுங்கியிருந்த ரவுடி  டியோ கார்த்திக் (27), சுரேஷ் (28),  கோபி (25) ஆகிய 3 பேரை தனிப்படை  போலீசார் கைது செய்தனர். இவர்கள் மாமூல் கேட்டு கொடுக் காததால் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.

நகைக்கடை உரிமையாளரை வெட்டி 25 சவரன், 50 ஆயிரம் கொள்ளை

சென்னை, ஆக.17-  ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியில் வசித்து  வருபவர் ரமேஷ் குமார் (38).  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 12 வருடங்களாக திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே உள்ள பிருந்தாவனம் நகரில்,  நகைக்கடை நடத்தி வருகிறார்.  வியாழனன்று இரவு, இவர் கடையில் தனியாக இருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 4 பேர், கடைக்குள்  புகுந்து, ரமேஷ் குமாரிடம் நகை, பணம் கேட்டு மிரட்டியுள்ள னர். அவர் தர மறுத்ததால் கத்தியால் வெட்டினர், இதை யடுத்து, கடையில் வைத்திருந்த 25 சவரன் நகைகள் மற்றும்  கல்லாவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளை யடித்துவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரமேஷ்குமாரை மீட்டு, அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

சிதம்பரம், ஆக 17- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனை வோர் இயக்கம் மற்றும் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் இணைந்து மாணவர்க ளுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடை பெற்றது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சிதம்பரம்,ஆக.17- சிதம்பரம் அருகே கடற்கரையோர கிராமத்தில் வசிக்கும் 13 வயது சிறுமி யிடம், 35 வயதாகும் சித்தப்பா அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.  இதுகுறித்து அந்த சிறுமி, அண்ணனிடம் கூறி யுள்ளார். இதையடுத்து, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சித்தப்பா வும் உடந்தையாக இருந்த தந்தையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.  இதற்கு உடந்தையாக இருந்த தந்தை வழி உறவுக்கார பெண்கள் 3 பேரை அழைத்து விசார ணை மேற்கொண்டு வரு கின்றனர்.

புதுவையில் உயர்மட்ட மேம்பாலம்: ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை!

புதுச்சேரி, ஆக.17- தில்லி சென்ற புதுச்சேரி மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஒன்றிய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு நிதியினை ஒதுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார். அப்போது இந்தப் பாலத்துக்கான ஆய்வுப் பணி களுக்காகவும் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காகவும் போதிய நிதி ஒதுக்கப்பட்டு விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து அமைச்ச கத்தின் பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டால் உடனே ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு மேம்பாலப் பணிகளை ஆரம்பிக்கலாம் என எடுத்துரைத்தார். மேலும், இந்திரா காந்தி சதுக்கம் முதல் முள்ளோடை வரை உள்ள இரண்டு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கவும், ஒரு முறை தளர்வு அடிப்படையில் நிதி ஒதுக்கி புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுமாறும்  அமைச்சரிடம் லட்சுமி நாராயணன் கோரிக்கை வைத்தார்.