districts

சென்னை முக்கிய செய்திகள்

பைக் மோதி மூதாட்டி பலி

திருவள்ளூர்,செப்.19- பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணா குப்பம் கிரா மத்தைச் சேர்ந்த எல்லம் மாள் (60). இவர் தண்ணீர் பிடிக்க குடத்துடன் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக  வந்த மோட்டார் பைக்  இவர் மீது  மோதியது. இதில் எல்லம் மாள் பலத்த காயம் அடைந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய இருசக்கரவாகன ஓட்டியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வீடுகள் மீது விழுந்த உயர்கோபுர மின்கம்பி

சென்னை,செப்.19- வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து எண்ணூர் ரயில்வேக்கு மிகப்பெரிய உயர் மின் கோபுரம்  மூலம் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படு கிறது.   இதற்காக எண்ணூர், அண்ணா நகர், சாஸ்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேல் உயர் மின் அழுத்த  கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் திங்களன்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த போது உயர்  மின் அழுத்த கோபுரத்தில் இருந்த மின்கம்பி திடீரென அறுந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. இதனால் அந்த இடத்தில் லேசாக தீப்பிடித்ததோடு அந்த பகுதியில் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. மின்  கம்பி அறுந்து விழுந்ததும் மின்இணைப்பு  துண்டானதால்  நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வீடுகள் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரிய கலாச்சார கொண்டாட்டம்
சென்னை, செப்.19–  எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், கொரிய கலாச்சார மையத்துடன் இணைந்து “அகில இந்திய கே-பாப் போட்டி 2023”ஐ டெல்லியில் உள்ள தியாகராஜா விளை யாட்டு வளாகத்தில் நடத்தியது.  இதில் நாடு முழுவதிலுமிருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய இந்த போட்டியில் முதலில் 11 ஆயிரம் பேர்  ஆன்லைன் மூலம் பங்கேற்றார்கள். அதைத் தொடர்ந்து, கொல்கத்தா, சென்னை, மும்பை மற்றும் இட்டாநகர் உட்பட  இந்தியா முழுவதும் உள்ள 11 முக்கிய நகரங்களில் பிராந்திய சுற்று நடைபெற்றது. பின்னர் இதற்கான அரை இறுதிப் போட்டி டெல்லியில் நடைபெற்றது. அதில் இருந்து 12 திறமையான அணிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன. இதில் இந்தியாவிற்கான கொரியா தூதர் சாங் ஜே-போக், வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர்  (கிழக்கு) சவுரப் குமார் மற்றும் எல்ஜி இந்தியா நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் ஹாங் ஜூ ஜியோன் ஆகியோர் கலந்து கொண்டனர். டெல்லியைச் சேர்ந்த பிராச்சி ஷர்மா குரல் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தார். பாட்டுப் பிரிவில் டெல்லியைச் சேர்ந்த பிராச்சி ஷர்மா, சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி ராம்நாராயண், கொல்கத்தாவைச் சேர்ந்த அபிப்ரியா சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பூண்டி ஏரிக்கு  தண்ணீர் வரத்து அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை,செப்.19-  சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்து வைத்து சென்னை குடிநீர் தேவைக்காக தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்புவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவடட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா பகுதியில் பெய்து வரும் பலத்த  மழை காரணமாக தற்போது பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின்  அளவு அதிகரித்துள்ளது. செவ்வாயன்று காலை நிலவரப்படி  பூண்டி ஏரிக்கு 1030 கனஅடியாக இருந்தது. பூண்டி ஏரியின்  மொத்த கொள்ளளவு 3231 மில்லி யன் கனஅடி. இதில் 2586 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு மழைநீர் 650  கனஅடியும், கிருஷ்ணா தண்ணீர் வரத்து 380 கன அடியாகவும் இருந்தது. 480 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

கோயம்பேட்டில் பயணியிடம் நகை திருட்டு

சென்னை,செப்.19- மடிப்பாக்கம், பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்.இவர்,  மனைவி மோகனா மற்றும்  2 வயது மகனுடன் வந்தவாசி யில் நடந்த உறவினர் திருமண  நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார்.   பின்னர் அவர்கள் 2-வது  பிளாட்பாரத்தில் பேருந்துக்காக  காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து மோகனா பார்த்தபோது அருகில் வைத்திருந்த 17சவரன் நகை இருந்த கைப்பை மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.  அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவு களை வைத்து நகை திருட்டில்  ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த  டின்சின் நம்கட் (26) என்ப வரை கைது செய்தனர்.

வேளாண் பொருட்களுக்கு செஸ் வரி நீக்கம்: வணிகர் பேரமைப்பு வரவேற்பு
சென்னை, செப். 19- வேளாண் விளைபொருட்களுக்கு செஸ்வரி ரத்து செய்யப்பட்டதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்றுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வேளாண் விளைபொருட்க ளுக்கு விற்பனை மையங்களில் விற்கப்படும் விளைபொருட்களுக்கு செஸ்வரி விதிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் அரசு அதிகாரிகள் மார்க்கெட்டிங் கமிட்டிக்கு வெளியிலும், வழிகளில் செல்லும் வாகனங்களிலும் ஆய்வு செய்து, சட்டத்திற்கு புறம்பாக செஸ் வரி விதித்து வந்தனர். இது பல்வேறு வகைகளில் வேளாண் பொருள்  விற்பனையில் ஈடுபட்டு வரும் வணிகர்களை  மட்டுமல்லாது, பலசரக்கு மளிகை நடத்தி வரும் வணிகர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பாக இருந்தது.   இந்நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் செஸ்வரி விதிப்பு சம்பந்தமாக ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் எதிர்ப்பை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அழுத்தம் கொடுத்து வந்தது. அதனடிப்படையில் 3.1.2023 அன்று அரசாணை எண்.1இன் மூலம் அரசாணை எண்.84/23-4-2022 திரும்பப்பெறப்பட்டது. அரசாணை எண் 84 ரத்து செய்யப் பட்டதை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை 28.8.2023 அன்று தனது தீர்ப்பின் அடிப்படையில் உறுதி செய்திருப்பது மட்டுமல்லாமல், பலவகை தானியங்கள் என்று சொல்லப்படும் மல்டி கிரைன்ஸ் மீதும்  செஸ் வரி விதிக்கக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கு எண். டபிள்யுபி 18093/22. டபிள்யுபி எம்பி  13194/2022-ன்படியும் உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் பிறப்பித்த ஆணையில் உறுதி செய்துள்ளார். மேலும் பருத்தி வித்துக்களுக்கும், பாசிப்பயறுக்கும் செஸ்  வரி விதிப்பு பொருந்தாது என்றும் ஆணை பிறப்பித்துள்ளார். எனவே, மார்க்கெட்டிங் கமிட்டிக்கு வெளியே விற்கப்படும் வேளாண் விளை பொருட்களுக்கு செஸ்வரி கட்டணம் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை, ஏற்கெனவே அரசாணை எண்.84 ரத்து செய்யப்பட்டதன் மூலம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்திருப்பதை வரவேற்கிறோம். தமிழ்நாடு வேளாண் துறை அரசு அதிகாரிகள், வேளாண் விளைபொருள் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் தரக்கூடாது என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்லியுடன் மட்டன் பிரியாணி:  உணவகம் ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை, செப். 19- பல்லி விழுந்த மட்டன் பிரியாணி சாப்பிட்டதில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவருக்கு, ஓட்டல் நிர்வாகம் ரூ55 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி, சென்னை மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது சென்னை புரசைவாக்கம், டவுட்டனில் உள்ள ஓட்டல் டெக்கான் என்கிற உணவகத்தில், வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த அப்பாஸ் அலி, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் மட்டன் பிரியாணியை சாப்பிட்ட  பின், குமட்டல், வாந்தி, வயிறு வலி  ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியாணி யில் 4 அங்குல பல்லி கிடந்தை கண்டு,  பயந்து அருகில் உள்ள மருத்துவ மனையில் முதலுதவியும், ராஜீவ்  காந்தி அரசு பொது மருத்துவமனை யில் அவசர சிகிச்சை பிரிவில் 3 நாட்கள் சிகிச்சையும் பெற்று வீடு திரும்பியுள்ளார். அதன்பின்னர், தரமற்ற மற்றும்  உயிருக்கு ஆபத்தை விளைவித் திருக்கக் கூடிய உணவை வழங்கிய தாகக் கூறி, டெக்கான் ஓட்டல் நிர்வா கம் தனக்கு இழப்பீடாக 2 லட்ச ரூபாயும், மருத்துவ செலவுக்காக 50  ஆயிரம் ரூபாயும், மன உளைச்சலுக் காக ரூ1 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த தலைவர் வினோபா, உறுப்பினர் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஓட்டல் நிர்வாகத்திற்கு எதிராக உணவு பாது காப்பு துறை நடவடிக்கை எடுத் துள்ளதை சுட்டிக்காட்டி, உணவுப் பொருளில் பல்லி விழுந்தால், உணவு  விஷமாக மாறி, அந்த உணவை உண்ட வர் உயிரிழக்கவும் நேரிடும் என  குறிப்பிட்டுள்ளனர். எனவே, பாதுகாப் பற்ற உணவை வழங்கி, சேவை குறை பாடுடன் நடந்த டெக்கான் ஓட்டல் நிர்வாகம் மனுதாருக்கு இழப்பீடாக 50  ஆயிரம் ரூபாய், மருத்துவ செலவாக ரூ 5 ஆயிரம் என ரூ 55 ஆயிரத்தை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதியமான் கல்லூரியில் பொறியாளர்கள் தினம்

கிருஷ்ணகிரி,செப்.19- பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 56 வது பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை தாங்கினார். முதல்வர் பத்ரி நாராயணன், முருகேசபாண்டியன், தொழில் முனைவோர் முனைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் உரை யாற்றினர். இந்த நிகழ்ச்சியில், இக்கல்லூரியில் பயின்று பொறியாளர்களாக பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.