பொதுத்துறை நிறுவனங் களை தனியாரிடம் விற்பனை செய்யாதே, அவுட்சோர்சிங் முறையை கைவிடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் எஸ்.தேவமணி, மாவட்டச் செயலாளர் டி.செந்தில் பொருளாளர் ஏ.வீரா சாமி, துணைத் தலைவர் வி.முருகன், துணைச் செயலா ளர் எஸ்.வெங்கடேசன், குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.சரவணன், கே.வேலாயுதம் (இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் கே.பால சுப்ரமணியன், துணைத் தலை வர் பி.குமார், நிர்வாகிகள் கே.அம்பிகாபதி, எச்.ரகோத் மன், ஆர்.சேகர், ஆர்.கணபதி, வி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே மாவட்ட துணைத் தலைவர் வி.நாகேந்தி ரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், துணைத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன், நிர்வாகிகள் எம்.கோவிந்தரராஜ், சி.சரவணன், என்.பிரபாகரன், கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.