கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி செய்திடும் ஒப்பந்த தொழிலாளர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்வதை ஒப்பந்த நிறுவனம் கைவிட வேண்டும் என்று கல்பாக்கம் அட்டாமிக் எனர்ஜி காண்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ் மற்றும் லேபர் யூனியன் சங்கத்தின் செயல் தலைவரும் சிஐடியு மாவட்ட துணைத் தலைவருமான கே.பழனிச்சாமி கூறினார். அவர் மேலும் கூறுகையில். வேலை நீக்கம் செய்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும், அணுமின் நிலையத்தில் நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும், நெய்வேலி என்எல்சியில் உள்ளது போல் கிங்காஸ் தொழில் கூட்டுறவு சங்கத்தினை உருவாக்கிட வேண்டும், அல்லது புதிய கூட்டுறவு சேவை சங்கத்தினை உருவாக்கி அனைத்து உரிமைகளையும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் சுற்றுவட்டார கிராம மக்களின் மேம்பாட்டிற்கான பள்ளி, கல்லூரி, மருத்துவமனை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும், தொழிலா ளர்கள் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு உரிமைகளை உத்தர வாதப்படுத்திட வேண்டும், இதற்கான போராட்டத்தை சிஐடியு தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து நடத்தி வருகின்றது என்றார்.