districts

img

ஒப்பந்த, மறைமுக தனியார்மய நடவடிக்கைகளை கைவிடுக! சிபிஎம் போக்குவரத்து மாநாடு கோரிக்கை

சென்னை, அக். 20 - போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறை, மறைமுக தனி யார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்ட போக்குவரத்து அரங்க இடைக்குழு மாநாடு வலியுறுத்தியுள்ளது. அக்.19-20 தேதிகளில் வடபழனி யில் நடைபெற்ற மாநாட்டில், சிறப்பு பேருந்து இயக்கம் என்ற பெயரில் தனியார்மயத்தை புகுத்துவதை கைவிட வேண்டும்,15வது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும், பணி ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வுக்கால பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு  கொடியை இடைக்குழு உறுப்பினர் எம்.கருணாநிதி ஏற்றினார். பொதுமாநாட்டிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அசோகன் தலைமை தாங்கினார். இடைக்குழு உறுப்பினர் எஸ்.இளங்கோவன் வரவேற்க, இடைக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் தொடக்கவுரையாற்றினார். வேலை மற்றும் அமைப்பு அறிக்கையை இடைக்குழுச் செயலாளர் ஜி.செந்தில்குமாரும், வரவு செலவு அறிக்கையை இடைக்குழு உறுப்பினர் எஸ்.விஜயகுமாரும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் பா.பாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.முருகானந்தம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் நிறைவுரையாற்றினார். இடைக்குழு உறுப்பினர் எஸ்.பரமசிவம்  நன்றி கூறினார். இடைக்குழு தேர்வு 13 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக எஸ்.விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.