districts

img

பொது அபாயத்தை வேரறுக்க, மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும்

செய்யாறு, ஏப்.13- ஆரணி மக்களவைத் தொகுதியின் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம். எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், செய்யாறு ஆரணி கூட்டு சாலை அருகே நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு, வட்டார செயலாளர் டி.வெங்கடேசன் தலைமை தாங்கினார், வட்ட குழு உறுப்பினர் தாமோதரன் வரவேற்றார், இதில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேசிய போது, சாதி கடந்து, மதம் கடந்து, மக்களை நேசிப்ப வர் தான் பிரதமராக இருக்க முடியும்.  எல்லா மக்களும், என் மக்கள் என்று சிந்திப்பவர்கள் தான் பிரதமராக இருக்க முடி யும். ஆனால், பிரதமர் மோடியிடம் தேச விரோத சிந்தனையே மேலோங்கி உள்ளது.   முதலாளிகளை பாதுகாக்கும்சிந்தனை  உள்ளது.  சிறுபான்மையி னர், தலித்மக்கள்,  பெண்கள் ஆகி யோர் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வர் எப்படி இந்த தேசத்தின் பிரதமராக இருக்க முடி யும் என்று கேள்வி யெழுப்பினார். முஸ்லிம்கள் அதிக மாக குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்,  எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்துக்களை விட ஜனத்தொகையில் அதிக மாகி விடுவார்கள் என்று மோடி பிரச்சாரம் செய்கி றார்.  ஆனால், பிறப்பு, இறப்பு விகிதம் தற்போது சமநிலையில் உள்ளது.  உதாரணமாக, கேரளாவில், மலப்புரம் ஜில்லாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி, கல்வி தரம் உயர்ந்த பகுதி என்பதால், அங்கு பிறப்பு இறப்பு விகிதம் நீண்ட காலமாக  சமநிலையில்  உள்ளது.  இந்தியாவில் வேலை இல்லா இளைஞர்கள் அதி கரித்துள்ளனர். பட்டினி குறியீடு அதிகரித்துள்ளது.   ஆரோக்கிய குறைபாடு பெண்கள் மரணம், குழந்தை கள் மரணம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளது.  இதை யெல்லாம் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அங்கன்வாடியில் நிதி குறைப்பு,  100 நாள் வேலை திட்டத்தில் நிதி குறைப்பு போன்றவை காரண மாக  மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில்  நீதித்துறையினர்,  சமூக செயல்பாட்டாளர்கள், சிந்தனையாளர்களுக்கு எதிரான பெரிய பொய் பிரச்சாரத்தை பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் தொடர்ந்து நடத்தி வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். எனவே,  பொது அபாயம் என்று வந்துவிட்டால், வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு போராடி பொது அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும்.  பொது அபாயமாக விளங்கிவரும் பாஜகவை ஒழிக்க,  இந்தியா கூட்டணி வேட்பாளர் தரணி வேந்தனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த பொதுக் கூட்டத்தில், செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வன், ந. சேகரன், எஸ். ராமதாஸ், எம்.பிரகல நாதன்,  அ.இளங்கோவன் திக,  வெற்றிவளவன் விசிக,  ஜமால் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.