districts

img

அகவிலைப்படி நிலுவையை விரைந்து வழங்குக

சென்னை, பிப். 7 - உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கு உடனடியாக அக விலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து புதனன்று (பிப்.7) தொழிலாளர் நல தனி ஆணையர் ரமேஷ் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுக நயினார் உள்ளிட்டு 27 சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது: ஓய்வூதியர்களின் அகவிலைப்படி தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதை பிப்.6 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அரசின் மனுவை நிராகரித்து விட்டது. ஓய்வூதியர் களின் அகவிலைப் படியை நிலுவைத் தொகை யோடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே, 8 ஆண்டுகளாக ஓய்வூதியர்க ளுக்கு நிலுவை வைத்துள்ள அக விலைப்படி, மற்றவர்க ளுக்கு தர வேண்டிய நிலுவைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழி லாளர்களுக்கு 14 மாதங்களாக அக விலைப்படி நிலுவை உள்ளது.  அதை வழங்காமல் தாமதம் செய்தால் மேலும் பிரச்சனை உருவாகும் என்று பேச்சு வார்த்தையில் வலியுறுத்தினோம். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடைக்கால நிவாரணம் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு அரசு தரப்பில் 14 பேர் கொண்ட குழு அமைத்து ஆணை யிடப்பட்டுள்ளது. அந்தக்குழு விரைவில் பேச்சுவார்த்தைக்கான தேதியை அறிவித்து தொடங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  பேச்சுவார்த்தை எப்போது தொடங்கப் படும் என்பதை விரைந்து சொல்ல வேண்டும், மாதம் 3 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம். வாரிசு பணியிடங்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது, வாரிசு, வேலை வழங்குவது ஆகிய கோரிக்கைகளை அரசு முழுமையாக நிரப்ப வில்லை. காலிப்பணியிடங் களை நிரப்பா மல் கேசுவல் தொழிலாளர்களை பணிக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போதுள்ள சிஎல் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியுள்ளோம். ஓட்டுநர் நடத்துநர்களாக உள்ள வாரிசு களுக்கு வேலை கொடுக்கிறார்கள். அதிலும் நிலுவை உள்ளது. 10ஆம் வகுப்பு கீழே கல்வி தகுதியுள்ள வர்கள் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வர்கள் உள்ளனர். 14 ஆண்டுகளாக பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வேலை மறுக்கும் வகையில், அவுட்சோர்சிங் விட கடந்தாண்டு அதிமுக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த ஆணையை ரத்து செய்து, பணி வழங்க வேண்டும். பழிவாங்கல் கூடாது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது பழி வாங்கல் கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனை மீறி மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், விழுப்புரம் போன்ற இடங்களில் இடமாற்றம், வண்டியின் தூரத்தை அதி கரிப்பது என்ற பெயரில் பழி வாங்கு கின்றனர். இதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், மாநகர போக்குவரத்து கழகத்தை போன்று செயல்பட அனைத்து கழகங்களுக்கும் அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளது. எனவே, மீண்டும் ஒரு போராட்டத்திற்கு போகாமல் இருக்க, போக்குவரத்து நிர்வாகம் விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்த பல மாநில அரசுகள் முடி வெடுத்துள்ளன. தமிழக அரசு அளித்த வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 21ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.