districts

img

சென்னை செல்லும் பேருந்துகள் அமைச்சர் தொகுதிக்குள் வராத அவலம்

ராணிப்பேட்டை,நவ.16-   சென்னை செல்லும் நீண்டதூர பேருந்துகள் அமைச்சரின் தொகுதியான ராணிப்பேட்டை முத்துக்  கடைக்கு வராத காரணத் தால் தொகுதி மக்கள்  பல ஆண்டுகளாக அவதிப்  படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்  குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் குற்றம்சாட்டினார்.  கட்சியின் ராணிப் பேட்டை மாவட்ட முதல் மாநாடு முத்துக்கடையில் சனிக்கிழமையன்று (நவ.16) மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன் தலைமை யில் பேரணியுடன் தொடங்கியது. புதிய பேருந்து நிலையம் அரு கில் துவங்கிய பேரணி நவல்பூர் எம்.எஃப் ரோடு, எம்.பி.டி ரோடு வழியாக முத்துக்கடை பேருந்து நிலையத்தை அடைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த கோரிக்கையை அமைச்சர் நிறைவேற்றித் தரவேண்டும் என்றார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளநீரில் கூட ரசாயனம் கலந்துள்ளது. புற்றுநோய் அதிக அளவில் உள்ளது என ஆராய்ச்சி ஆய்வு தெரி விக்கிறது. அந்தளவுக்கு தொழிற்சாலை மாசு அதி கரித்துள்ளது. கைத்தறி, தோல் தொழிற்சாலைகள் நெருக்கடியில் உள்ளன. கடன் தொல்லையால் விவ சாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.  தற்கொலைக்கு தள்ளப்படு கின்றனர். விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானி எம். எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைத்த ஆதரவு விலையை மத்திய அரசு இன்றுவரை வழங்க வில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். புதிய சிப்காட் தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையில் அமைத்து இருப்பது வர வேற்கத்தக்கது. ஆனால், அங்கு பணிபுரியும் தொழி லாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் தரப்படுவ தில்லை. சட்டப்படியான ஊதியத்தை பெற்றுத்தர அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொழிற் சாலைகளில் சங்கம் வைக்க முடியவில்லை. சட்ட ரீதியான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. குறைந்த விலைக்கு ஆட்கள் எங்கு கிடைக்கிறார்களோ அங்கு தொழிற்சாலைகளை முதலாளிகள் உரு வாக்குகின்றனர். தொழி லாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் பாக்கியம் கூறி னார். தமிழக அரசு ஒன்றிய அரசின் அநியாய கொள்கை களை எதிர்க்கவேண்டும். மக்களின் அடிப்படை பிரச்ச னைகள். தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கை களில் அரசாங்கம் தலை யிட வேண்டும் எனவும் பாக்கியம் கேட்டுக்கொண்டார். பொதுக்கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர்கள் பி. சுந்தர்ராஜன், எம். ராமகிருஷ்ணன், மாவட்ட அமைப்புக் குழு உறுப்பி னர்கள் ஆர். மணிகண்டன், எல்.சி. மணி, தா. வெங்க டேசன், ஆர். வெங்கடேசன், டி. சந்திரன், பி. ரகுபதி ஆகியோர் பேசினார்கள்.  இறுதியாக ராணிப்பேட்டை நகர செயலாளர் ஜி. குண சேகரன் நன்றி கூறினார்.