districts

img

விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க மக்கள் கோரிக்கை

சென்னை, மார்ச் 20- வடசென்னை மக்களின் போக்கு வரத்து வசதியை எளிதாக்கும் வகையில் திருவொற்றியூர் விம்கோ நகர் பணிமனை, மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்டு பொதுநல அமைப்புகள், பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மெட்ரோ மூலம் தினசரி  பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டு முதல் கட்டமாக விம்கோ நகர் பணிமனையில் இருந்து விமான நிலையம் வரை 45 கி.மீ. தூரத்திற்கு ஒரு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் புனித தோமையர் மலை வரை 22 கி.மீ. தூரத்திற்கு இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளை யும் இணைக்கும் வகையில் இரண் டாம் கட்ட மெட்ரோ பணிகள் மூன்று  வழித்தடங்களில் நடந்து வருகிறது. அதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45 கி.மீ. தூரத்திற்கும், மூன்றாவது வழிதடத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கி.மீ. தூரத்திற்கும், 4ஆவது வழித்த டத்தில் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 45 கி.மீ. தூரத்திற்கும் வழித்தடம் அமைக்கப் பட்டு வருகிறது. தற்போது விம்கோ நகர் மெட்ரோ  நிலையத்திலிருந்து விமான நிலையம் செல்லும் வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதற்கு காரணம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் நோக்கி வரும் புறநகர் ரயில் பயணிகள் விம்கோ நகரில் இறங்கி மெட்ரோ ரயில் நிலை யம் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பயணம் செய்கின்ற னர். மேலும் தற்போது எழும்பூர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அமை ந்தகரை,

அண்ணாநகர், கோயம்பேடு வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு வட சென்னையில் இருந்து முதலில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை பயணித்து அங்கிருந்து 2ஆவது வழி த்தடத்தில் பச்சை நிற மெட்ரோ ரயிலில் செல்ல வேண்டிய நிலை உள்ளது இதனால் பாதை மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளும், பயண நேரமும் அதிகரிக்கிறது. விம்கோ நகர் மாதவரம் ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டால் திருவொற்றியூரில் இருந்து இயக்கப் படும் ரயில்களில் நேரடியாக எங்கும் இறங்காமல் இந்த பகுதிகளுக்கு பய ணிக்க முடியும். மேலும் திருவொற்றி யூரில் இருந்து சிறுசேரி வரையிலும், சோளிங்கநல்லூர் வரையிலும் ஒரே ரயிலில் நேரடியாக பயணிக்க முடி யும். இது மட்டுமல்லாமல் எதிர்காலத் தில் சுமார் 12 கி.மீ. தூரம் உள்ள மாத வரத்திற்கு திருவொற்றியூரில் இருந்து சுற்றிக்கொண்டு செல்வ தையும் தவிர்க்க முடியும். இந்த நிலையங்கள் இணைக்கப் பட்டால் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மீஞ்சூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உரத்தொழிற் சாலை, கனரக தொழிற்சாலைகள் உள்ளிட்டு பிற நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் பயனடை வார்கள். எனவே திருவொற்றியூர் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலை யத்தையும் மாதவரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையத்தையும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.