தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4ஆவது மாநில மாநாட்டின் நோக்கங்களை விளக்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ராயபுரத்தில் திங்களன்று (டிச. 19) நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் துவக்கி வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் நித்தியராஜ், மாவட்டச் செயலாளர் சரவணதமிழன், மாநிலக் குழு உறுப்பினர், தமிழ்செல்வி, மாவட்ட துனைத் தலைவர் எஸ்.முருகேசன், பகுதிச் செயலாளர் நீதி தேவன், தலைவர் தீபா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ராஜ்குமார், ராயபுரம் ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.