districts

img

நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த வாலிபர் காப்பாற்றப்பட்டார்

சென்னை, அக்.16–   சென்னை கடற்கரையில் மற்றொரு வாலிபரை காப்பாற்றச் சென்ற வாலி பர் ஒருவர் திடீரென நீரில்  மூழ்கி உயிருக்கு ஆபத் தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அளித்த சிகிச்கையால் உயிர்பிழைத்தார்.  இது குறித்த விவரம் வருமாறு:– தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருவான்மியூரைச் சேர்ந்த அருள் மொழி என்பவர் தனது நண்பர்க ளுடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றபோது, கடலில் குளித்துக் கொண்டி ருந்த வாலிபர் ஒருவர் கட லுக்கு இழுத்துச் செல்லப்படு வதைக் கண்டு அவரைக் காப்பாற்ற கடலுக்குள் குதித்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகை யில் பெரிய அலை ஒன்று அவரை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது. அப்போது கரையில் நின்ற வர்கள் உடனடியாக அரு மொழியை மீட்டு அவ ருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 10 நிமிடத்திற்குள் திருவான்மியூரில் உள்ள புரோமெட் மருத்து வமனையில் சேர்த்தனர். சுயநினைவற்று மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவ ருக்கு புரோமெட் மருத்துவ மனையின் அவசர சிகிச்சை  நிபுணர் டாக்டர் சந்தோஷ் தலைமையிலான டாக்டர் கள் குழு உடனடியாக உயிர்  காக்கும் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற் றியது. முன்னதாக பரிசோ தனையில் அந்த இளை ஞருக்கு ஆஸ்பிரேஷன் நிமோனியா மற்றும் நுரையீரல் வீக்கம் இருப்பது  தெரிய வந்தது என மருத்து வமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் கூறினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு நாடித்துடிப்பு இல்லை. மருத்துவ நிபுணர் குழுவின் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் காரணமாக அந்த இளைஞர் இயல் பான நிலைக்கு திரும்பி னார் என்றும் அவர்  தெரி வித்தார்.