districts

சென்னை முக்கிய செய்திகள்

லாரியின் மேல் தூங்கிய வாலிபர் பலி

மாமல்லபுரம்,மே 30-  கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சி.வன்னி யூர் பகுதியை சேர்ந்தவர் இளஞ்சூரியன் (வயது27). அப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள் தயார் செய்யும் கம்பெனி யில் வேலை செய்து வந்தார்.  இவர் சிமெண்ட் தொட்டி கள், சிலாப்களை லாரியில்  ஏற்றிக் கொண்டு சென் னைக்கு வந்து கொண்டு இருந்தார். இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய் தார். கல்பாக்கம் அடுத்த ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலை யில் வந்த போது ஒரு வளை வில் லாரியை டிரைவர் திருப்பினார். இதில் நிலை தடுமாறிய லாரியின் மேல் பகுதியில் படுத்து இருந்த  இளஞ்சூரியன் தவறி நடு ரோட்டில் கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை நிறுத்தினார். பின்னர் பலத்த  காயம் அடைந்து உயிருக்கு போராடிய இளஞ்சூரியனை அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் மீட்டு மாமல்ல புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றார். ஆனால் போகும் வழியி லேயே அவர் இறந்தார்.

சாத்துகுடி விற்பனை அதிகரிப்பு

போரூர்,மே 30-  கோயம்பேடு மார்க் கெட்டுக்கு  சாத்துகுடி வரத்து அதிகரித்து உள்ள தால் அதன் விலை சரிந்துள்ளது. மொத்த விற்பனை கடை களில் ஒரு கிலோ சாத்துக் குடி ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகிறது. அதேபோல் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு  கிலோ சாத்துக்குடி ரூ.70 வரை விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

தடுப்பணையில்  மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

வாலாஜாபாத்,மே 30-  காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, பழைய சீவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சாமுவேல் வயது  16. இவர்  நண்பர்களுடன் பழையசீவரம் பாலாற்றில் உள்ள  தடுப்பணையில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்து  கொண்டிருந்த நிலையில் சாமுவேல் திடீரென நீரில் மூழ்கி மாயமாகி விட்டார். உடனே கிராம மக்கள் ஓடி வந்து  தடுப்பணையில் தீவிரமாக தேடினர். நீரில் மூழ்கி உயிரிழந்த  சிறுவன் சாமுவேல் உடலை மீட்டனர். இது குறித்து தகவல்  அறிந்து விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த  சிறுவன் சாமுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிக்கப்பட்டு கிராமத்தில் மருத்துவமுகாம்

பொன்னேரி,மே 30-  பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு ஆகிய கிராமங்களில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக மர்ம காய்ச்சல் பரவியதையடுத்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பாலியல் தொல்லை- வாலிபர் கைது

அம்பத்தூர்,மே 30-  முகப்பேரில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் விடு தியில் தங்கி உள்ள பெண் கள் அறைக்கதவை பூட்டி விட்டு தூங்கினர். இந்த நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் வாலிபர் ஒருவர் பெண் கள் விடுதிக்குள்  ஜன்னல் வழியாக நுழைந்தார். பின்னர் அவர், அங்கு தூங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ஒருவரிடம்  பாலியல் சீண்டலில் ஈடு பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கூச்சலிடவே அந்த  வாலிபர் ஜன்னல் வழி யாக ஏறிக்குதித்து தப்பி  ஓடிவிட்டார். இது குறித்து ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து வந்த காவலர்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா  காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் பாலி யல் சீண்டலில் ஈடுபட்ட டேனியல் (25) என்பவரை கைது செய்தனர்.

ஏரி கரையை பலப்படுத்த கோரிக்கை

சூளகிரி, மே 30- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கானலட்டி கிராமத்தில் உள்ளது அன்னையப்பன் ஏரி. இந்த ஏரி சுமார் 14 ஏக்கர் நிலப்பரபரப்பில் அமைந்துள்ளது. பல கிராம மக்களின் விவ சாயம் மற்றும் குடிநீர் ஆதா ரத்திற்கு முக்கிய ஏரியாக விளங்குகிறது. கடந்த ஆட்சியில் இந்த ஏரியை தூர் வாருவதாக அறிவிக்கப்பட்டு, பின்பு கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு பருவ மழையில் ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள், கோழிப்பண்ணைக்குள் மழை நீர் புகுந்தது. பின்பு அதிகாரிகள் சென்று மணல் மூட்டைகளை வைத்து தடுத்தனர். தற்போது சில நாட்க ளாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வரு கிறது. தற்போது தூர் வாரா மல் சிதலமடைந்து காணப் படுகிறது. ஏரியை சீர மைத்து தூர் வாரக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக வில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திண்டிவனம், மே 30- திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதனன்று(மே 31) துவங்குகிறது. முதலாமாண்டு அனைத்து இளங்கலை, இளம் அறிவியல் பாடங்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள்,தேசிய மாணவர் படை, விளையாட்டுப் பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபர் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். ஜுலை 1 அன்று பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், புவி அமைப்பியல் மற்றும் புள்ளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், ஜுலை 2 வெள்ளிக்கிழமை பி.காம்., பிபிஏ ஆகிய பிரிவிற்கும், ஜுலை 3 பிஏ தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பிஏ., ஜுலை 5 வரலாறு பாடத்திற்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள இடங்களுக்கு 2 ஆம் கட்டமாக ஜுலை 6 ஆம் தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் ஜுலை 7 ஆம் தேதி பிகாம்., பி.ஏ., வரலாறு பாடங்களுக்கும் இறுதியாக ஜுலை 9 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச்சான்று, சாதிச்சான்று ஆன்லைனில் விண்ணப்பித்த படிவ நகல், ஆதார் அட்டை, ஆகிய அசல் மற்றும் நான்கு நகல்களுடன் குறித்த நேரத்திற்குள் வர   வேண்டும் என்று கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

குப்பை கிடங்கு அமைக்க மாற்று இடம் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு

திருவண்ணாமலை, மே 30- திருவண்ணாமலை அருகே மலையடி வாரத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருவண்ணாமலை அடுத்த புனல்காடு, தேவனந்தல் மூல குன்று மலை அடி வாரத்தில், திருவண்ணா மலை நகரம், அடிஅண்ணாமலை, வேங்கிக்கால் ஆகிய பகுதிகளில் சேகரமாகும் குப்பை மற்றும் பிளாஸ்ட்டிக் கழிவுகளை கொட்ட வேண்டும் என்ற திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்தது. இயற்கையை மாசுபடுத்தும் நோக்கில் குப்பை கொட்டுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடந்த 13ஆம் தேதியிலிருந்து காஞ்சி சாலையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அவர்க ளுடன் பேச்சு நடத்தி, பொதுப்பணித்துறை அமைச்சருடன் ஆலோசித்து, உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தார். அதனடிப்படையில் செவ்வா யன்று (மே 30) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வே.வேலு, ஆட்சியர் ப.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் ஆகி யோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் மற்றும் கிராம மக்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.   அப்போது, தற்போது குப்பை கொட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் குப்பை கொட்ட பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மாற்று இடத்தை தேவு செய்து குப்பை கிடங்கு அமைக்கலாம். வரும் 10 நாட்களில் மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெறும் என்றும் மாற்று இடம் அமையாத பட்சத்தில், தற்போதுள்ள இடத்தில் போதுமான பாதுகாப்பு அம்சங்களை கையாள்வது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரிய தர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் சரளா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், எஸ்.பலராமன், டி.கே.வெங்கடேசன், எஸ்.ராமதாஸ், அபிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒற்றை யானையை விரட்டும் பணி தீவிரம்

சூளகிரி, மே 30- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சானமாவு வனப்பகுதியில் இரண்டு மாதங்களாக சுற்றி திரிந்த ஒற்றை ஆண் யானை காமன்தொட்டி, தாசன்புரம் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றது. இந்த யானை ஊருக்குள் நுழையாமல், வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் பயிர் களை சாப்பிட்டு விட்டு மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்கு சென்று விடு கிறது. யானையை விரட்டு வகையில் நெருப்புகளையும், வெடி வெடிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுரை வழங்கினர். இந்த ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப். வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.