districts

சென்னை முக்கிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் குறைப்பு? அரசு பரிசீலிப்பதாக தகவல்

சென்னை, செப். 17-  10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள  அடுக்குமாடி குடியிருப்புகளில், பொதுப் பயன்பாட்டு மின் கட்டணத்தைக் குறைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தியது. அதில், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், பொது பயன்பாட்டிற்கான மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணம் கிலோ வாட்டுக்கு ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் மீண்டும் பொதுசேவை பிரிவுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ.8.15 ஆகவும், நிரந்தரக் கட்டணம் கிலோ வாட்டுக்கு ரூ.102 ஆகவும் உயர்த்தப்பட்டன. இந்தக் கட்டண உயர்வுக்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, குறைந்த எண்ணிக்கை வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் நடுத்தர மக்களும், தினசரி வேலைக்கு செல்பவர்கள் வசித்து வருகின்றனர். பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, 10-க்கும் குறைவான வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு மின் கட்டணத்தைக் குறைக்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, ஒரு யூனிட் ரூ.4.60 என்ற கட்டணத்தில் வசூலிக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின்வாரியத்துடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

பொன்னேரி,செப்.17- பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி வகுப்பு பள்ளியின் வளாகத்தில் பொன்னேரி தீயணைப்பு துறையினர் மாணவிகள் மத்தியில் பேரிடர் காலத்தில் தீ தொற்று, வெள்ள அபாயம், புயல் மழை நேரங்களில் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்றும், அந்நேரங்களில் மற்றவர்களை எவ்வாறு எல்லாம் காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட பயிற்சி ஒத்திகையை செய்முறைகள் செய்து காட்டி விளக்கத்துடன் எடுத்துரைத்தனர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

3 கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை

திருவள்ளூர்,செப்.17- பொன்னேரி அடுத்த சென்னிவாக்கம், கிராமத்தில் தியாஞ்சி அம்மன் கோவில் உள்ளது. இதில் ஞாயிறன்று  அதி காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் உண்டி யல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதேபோல் பொன்னேரி அடுத்த நெடு வரம்பாக்கம் சக்தி நாராயண பெருமாள் கோவில் மற்றும் லட்சுமி அம்மன் கோவிலில் கொள்ளை நடந்துள்ளது. இதுகுறித்து பொன்னேரி காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

காசிமேட்டில் அலைமோதிய அசைவப் பிரியர்கள்

சென்னை,செப்.17-  காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு ஞாயிறு காலை 180 முதல் 200 விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் வரத்து அதிக அளவில் இருந்தன. இத னால் மீன் விலை குறைந்து இருந்தது. வஞ்சிரம் ரூ.500-க்கும், சங்கரா ரூ.300-க்கும் விற்கப் பட்டது. அதிகாலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்தது.

அம்பத்தூர், அண்ணாநகரில்  2 நாள் குடிநீர்  விநியோகம் நிறுத்தம்

சென்னை,செப்.17- சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்திற்கு கீழ் உள்ள குடிநீர் பிரதான குழாயில் இணைப்பு பணிகள் நடப்பதால் வருகிற 20 ஆம் தேதி (புதன்) காலை 6 மணி முதல் 22 ஆம்  தேதி காலை 6 மணி வரை 2 நாட்கள் அண்ணா நகர், அம்ப த்தூர், தேனாம்பேட்டை பகுதிகளுக்கு குழாய்கள் மூலம்  தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் பெற்றுக்  கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், அழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளுக்கும் குடிநீர் தொட்டி களில் நீர் நிரப்பப்படும்.  லாரிகளில் தண்ணீர் சப்ளை நடைபெறும். நிரப்பப் படும். தெருக்களுக்கு லாரி விநியோகம் வழக்கம் போல் இடை யூறு இல்லாமல் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது

கொசு ஒழிப்பு பணி தீவிரம்: ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை,செப்.17- சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாந கராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  டெங்கு தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் கொசு ஒழிப்பு பணியை தீவிர ப்படுத்தி இருக்கிறோம். கொசு நல்ல தண்ணீரில் முட்டையிடும் போது 3 நாட்களுக் குள் புழுக்களாக மாறி விடும். அது 8 நாட்க ளில் கியூபாவாக மாறி விடும். 21 நாட்களுக் குள் லட்சக்கணக்கான முட்டைகள் புழுக்க ளாக மாறி லட்சக்கணக்கில் கொசுக்கள் வரு கிறது. அதனால்தான் பன்முக நடவடிக்கை யாக சுகாதாரத்துறை வீட்டுக்கு வீடு சென்று பார்வையிட்டு கொசு உற்பத்தியாவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கொசு ஒழிப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. சாக்கடை, குப்பையில் இதர நோய் வருவது போல் வீட்டுக்கு உள்ளேயே நல்ல தண்ணீரில் டெங்கு கொசு இருக்கும்.  அதே போல் கட்டுமான பணிகள் நடை பெறும் பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தி யாக வாய்ப்பு உள்ளது. அவற்றை பார்வை யிட்டு கொசு ஒழிப்பு பணியில் அலுவலர் கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வீட்டுக்குள் டெங்கு கொசு உற்பத்தியாவதை மக்களும் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேட்டில்  கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை,செப்.17- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூசை பொருட்கள் விற்பனைக்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சனிக்கிழமை நள்ளிரவு முதல் வரத்தொடங்கின. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டி உள்ள காளியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க புறநகர் பகுதிகளில் இருந்து வந்த பெரும்பாலான வியாபாரிகள் குறித்த நேரத்திற்குள் திரும்பி செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர்.  அதேபோல் மதுரவாயல் சாலை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுரவாயல் சாலையில் இருந்து மார்க்கெட் நோக்கி செல்லும் வாகனங்கள் நேராக செல்ல அனுமதிக்காமல் பூந்தமல்லி சாலையில் திருப்பி விட்டனர். ஆனால் அந்த வாகனங்கள் மேம்பாலத்தில் சுற்றி வந்து 100 அடி சாலை வழியாக வந்தது.  ஏற்கனவே கோயம்பேடு 100 அடி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

தென்பெண்ணையாற்றில்  தோண்ட தோண்ட கிடைக்கும் தோட்டாக்கள்

கடலூர், செப்.17- கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு உள்ளது. குறுக்கே கும்ந்தாமேடு தரைப்பாலம் உள்ளது. இதன் வழி யாக தினந்தோறும் நூற்றுக் கணக்கான பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்ற னர். மேலும் மீனவர்கள் சிறிய படகுகள் மூலமாக  மீன் பிடித்து வருகின்றனர்.  இந்த நிலையில், தற்போது ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீர் செல்வதால் சனிக் கிழமையன்று மாலை புதுச்சேரி மாநிலம் குமந்தாமேடு பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் மீன் பிடிக்க ஆற்றில் இறங்கினர். அப்போது சேற்று பகுதிகளில் கால் வைக்கும் போது சிறிய அளவிலான இரும்பு பொருட்கள் சிக்கின. அதை எடுத்து பார்த்தபோது துப்பாக்கி தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. பிறகு, ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினரிடம் வழங்கினர்.  பின்னர் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்த இடத்தை மீண்டும் தோண்டி பார்த்தபோது சிறிய முதல் பெரிய அள வில் 169 தோட்டாக்கள் சிக்கியது . இதனை தொடர்ந்து கைப்பற்றிய தோட்டாக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 169 துப்பாக்கி தோட்டாக்கள் துருப்பிடித்து இருந்தால் தடயவியல் நிபுணர்கள் சோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கு துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் குண்டு சோதனை செய்யும் நிபுணர்கள் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை தீவிர ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருமாவளவன் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த முடிவு

சிதம்பரம், செப்.17- சிதம்பரத்தில் ரயில் பயணிகள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் அப்துல் ரியாஸ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கம்பன் அம்பிகாபதி, பொருளாளர் அருணாச்சலம், துணைத் தலைவர் சிவராம வீரப்பன், நிர்வாகச் செயலாளர் கண்ணன், கூடுதல் செயலாளர் புகழேந்தி, சட்ட ஆலோசகர் ஸ்ரீதர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்ஒளி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் சாரதா சேது விரைவு ரயில்,  தாம்பரம்-செங்கோட்டை, காரைக்கால் எழும்பூர் விரைவு ஆகிய ரயில்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை-மயிலாடுதுறை மற்றும் மைசூர்-மயிலாடுதுறை ரயில்கள் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்து வருவதால்  இம்மாதம் இறுதிக்குள் தொல். திருமாவளவன் எம்பி தலைமையில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

வேலூர், செப்.17- வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த எருக்கம்பட்டு ஊராட்சி சின்ன பெருமாள் குப்பம் அருகில் உள்ள காப்புக்காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று நீர் தேடி கிராமத்துக்குள் வந்துள்ளது. அப்போது புள்ளிமானை நாய்கள் துரத்தியது. ஆனால் ஓடிய புள்ளிமான் அந்த கிராமத்தில் விவசாய கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது.  இதையடுத்து, இளைஞர்களும், கிராம மக்களும் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி புள்ளி மானை உயிருடன் மீட்டனர். பின்னர் இதுகுறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் புள்ளி மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.