திருக்கோவிலூர் வட்டம்.மேலூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகள் விக்னேஸ்வரி (6) என்பவருக்கு மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டச் ஆட்சியர் சர்வன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பரிசீலித்து உடனே ஆட்சியர் ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலி வழங்கினார்.