districts

img

பாதிக்கப்பட்ட விவசாயிகள் வழக்கு தொடர்வதற்கான சிறப்பு பேரவை

ராணிப்பேட்டை,ஜூன். 2 - உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளை ஒருங்கிணைத்து வழக்கு தொடர்வதற்கான சிறப்பு பேரவை கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய அரசாங்கத்தின் பவர் கிரிட் நிறுவனத்தின் மூலம் மாநில அரசாங்கத்தின் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் மூலம் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுமார் 32 கிராம விவசாயிகளை ஒருங்கிணைத்து பட்டா, சிட்டா, நிலத்தின் சந்தை மதிப்பு, அரசு மதிப்பீடு உள்ளிட்ட 11 முக்கிய ஆவணங்களை கொண்டு கூடுதல் இழப்பீடு வழங்க வழக்கு தொடர்வதற்கான சிறப்பு பேரவை கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு தலை மையில் வாலாஜா ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வளாகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் பி.பெருமாள்,மாநில துணை செயலாளர் இரா. சரவணன், மாவட்ட செய லாளர் எல்.சி. மணி, மாவட்ட நிர்வாகிகள் சி.ராதா கிருஷ்ணன், கே. ஏழுமலை ஆகியோர் பேசினார். இதில் கட்சியின் வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணி கண்டன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. சந்திரன், விவசாய சங்க தாலுகா செயலாளர் என். ரமேஷ், தாமோதரன், வேட்டைக் காரன் சங்க மாநில தலை வர் சேட்டு உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.