விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட திட்ட அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் உதவி அலுவலர் எஸ்.கே.ராஜேந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜி.ஜெயக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் கே.முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.