காவல் நிலையத்தில் ரவுடி தற்கொலை முயற்சி
சென்னை,செப்.18- சென்னை துரைப்பாக்கம், கண்ணகிநகரை சேர்ந்தவர் சிவகுமார் (28). இவர் மீது, அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன், சிறையில் இருந்து ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று மனைவி பிரியாவுடன் தகராறு செய்துள்ளார். தினமும் அடித்து உதைத்ததால் பிரியா கண்ணகி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படை யில் போலீசார் சிவகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய போது சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொண்டார்.பலத்த காயமடைந்த அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
கோயம்பேடு சந்தை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சென்னை,செப்.18- கோயம்பேடு மார்க்கெட் அருகே 300க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. இங்கு பொருட்கள் வாங்க வரு கின்றவர்கள் தங்களது வாகனங்களை சாலையி லேயே விட்டுவிட்டு செல்வ தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வெளி மாவட்டத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட் அருகே செல்வ தால், இந்த சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப் படுகிறது. இந்நிலையில், கோயம்பேடு போக்கு வரத்து அதிகாரிகள் முன்னி லையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு திட்டம்
சென்னை, செப்.18- பண்டிகை நாட்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை சமாளிக்க தனி யார் பேருந்துகளை வாட கைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங் களில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்க ளுக்குச் செல்வார்கள். இந்த காலங்களில் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, கூட்ட நெரிசலை சமாளிக்க, அரசுப் பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. ஏனெனில் இந்த நாள்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள பேருந்து களை நகரங்களில் இயக்கு வதால் அங்கு போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தனியார் பேருந்து களை வாடகைக்கு எடுத்து அதற்கு ஓட்டுநர், நடத்துநர் களை அரசு நியமிக்கும். எந்தெந்த ஊர்களுக்கு எத்தனை முறை பேருந்து இயக்கப்படுகிறது என்ப தைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும். பேருந்து பராமரிப்பை தனியார் பேருந்து உரிமையாளர்கள் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு வரு கிறது. பண்டிகை நாள்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்ப தால் இந்த திட்டம் நடை முறைக்கு வரும்பட்சத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வக்ஃப் வாரிய உறுப்பினராக நவாஸ்கனி எம்பி தேர்வு
சென்னை, செப்.18- தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியி டத்திற்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர் பிரிவுக்கு கே.நவாஸ்கனி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தி ருந்தார். ஒரு காலி யிடத்திற்கு ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால் 1997, விதி 9(6)ன் படி அவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் இணையம் வாயிலான வர்த்தகம் 35 விழுக்காடு வளர்ச்சி
சென்னை, செப் 18 ஸ்மார்ட்ஃபோன்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் அதிரடி கேமராக்கள் போன்ற பிரீமியம் தயாரிப்புகளுக்கான வலுவான தேவையால், தமிழ்நாட்டில் விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 35விழுக்காடு வளர்ச்சியை பெறுவதாக அமேசான் இணையம் வாயிலான வர்த்தக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ரூ.30,000 அல்லது ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள், இரட்டை கதவு குளிர்சாதனப் பெட்டிகள், ஆக்ஷன் கேமராக்கள் உள்ளிட்ட நுகர்வோர் மின்னணு சாதனங்களை அமேசான் இணையத்தில் வாங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக அந்நிறுவனத்தின் மின்னணு நுகர்வோர் பிரிவு இயக்குநர் ரஞ்சித் பாபு கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எளிதான-மாதாந்திர தவணைகள் (இஎம்ஐ) மூலம் வாங்கப்பட்டதைத் திருப்பிச் செலுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையும், தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதால் 35 விழுக்காடு வளர்ச்சியை மிக வேகமாகப் பெறுவதற்கு பங்களிக்கிறது என்று அவர் கூறினார். அதிகமான வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து தனது நிறுவனம் விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். "உதாரணமாக, சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களும் அதிகமாக பங்களிப்பதாக அவர் கூறினார். அமேசான் வலைத்தளம் வாயிலாக இந்தியா முழுவதும் சுமார் 16 லட்சம் விற்பனையாளர்கள் உள்ளனர். அதில் 95,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் இந்தியா- வங்கதேசம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
சென்னை, செப்.18- இந்தியா- வங்கதேசம் இடையேயான டெஸ்ட்கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை முதல் (செப்.19) நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில், டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அதன்படி, டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எப், ஜி, எச் அப்பர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐ,ஜே,கே லோயர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கே,எம், கே டெர்ரேஸ் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
சிறந்த தொழில்முனைவோருக்கு புத்தாக்க விருதுகள்
சென்னை, செப். 18- கவின்கேர் நிறுவனம், மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன்( எம்எம்ஏ) உடன் இணைந்து சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி பூங்கா கலையரங்கத்தில் சின்னி கிருஷ்ணன் இன்னோவேஷன் (புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான) விருதுகளை வழங்கியது. பொதுவெளியில் அதிகம் அறியப் படாமல், மனஉறுதியுடன், செயல் படும் திறன்மிக்க தொழில் முனைவோர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுகளை வென்ற வெற்றியாளர் ஒவ்வொருவருக்கும் பரிசுக்கோப்பை, பாராட்டு சான்றிதழோடு ரூ.1 லட்சம் என்ற ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. கோல்கேட்-பாமோலிவ் இந்தியா தலைமை செயல் அதிகாரி பிரபா நரசிம்மன் தலைமை விருந்தினராக இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தார்.
சமையல் எண்ணெய் விலை உயர்வு!
சுங்க வரியை நீக்க வணிகர் பேரமைப்பு கோரிக்கை
சென்னை, செப். 18- சமையல் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமான சுங்க வரியை நீக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில், கடந்த 13ஆம் தேதி ஒன்றிய அரசு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்தி கரிக்கப்படாத இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீது 22 விழுக்காடு வரி உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியான அதே தினத்தில் எண்ணெய் விலையை ரூ.20 முதல் 25 வரை எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தி விட்டன என்ற செய்தி ஊடகம் மற்றும் செய்தித்தாள்களில் வெளிவந்து பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்வரும் பண்டிகைகளான ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளில் சமையல் எண்ணெய் பலகாரங்கள் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இச்சூழலில் திடீரென சுங்கவரி உயர்த்தப்பட்டதும், எண்ணெய் விலை உயர்வும் அரசுகளின் மீது அபாண்டமான பழியை ஏற்படுத்தும் என்ப தோடு, பொதுமக்களின் அன்றாட செல வினத்தையும் அதிகப்படுத்தி, பன்முக பாதிப்பை ஏற்படுத்தும். மக்களின் மனநிலை அறிந்து உயர்த்தப் பட்டுள்ள இறக்குமதி சமையல் எண்ணெய் மீதான சுங்கவரியை உடனடி யாக நிறுத்துவைத்து பொது மக்கள் நலனை காத்திட ஒன்றிய அரசு முன்வர வேண்டுமென தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துவ தாக அதில் கூறப்பட்டுள்ளது.