சென்னை, ஜன. 28- சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து சிங்கார சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையை பயன்படுத்து வோரை ஊக்குவிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் ஒரு மெகா பரிசு திட்டத்தை அறிவித்தது. 2024இல் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் சிங்கார சென்னை அட்டையை அதிக முறை பயன்படுத்தி பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளில் தலா 40 பயனர்களை அடையாளம் கண்டு வெகுமதி அளித்தது. சென்னை திரு.வி.க. பூங்கா, செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை அதிக முறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்கு நர் மு.அ.சித்திக் வழங்கினார்.இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி, பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் பென்தர் பர்ஹி, மண்டல மேலாளர் அஸ்வத் துரை செல்வம், மார்க் மெட்ரோ இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.