சென்னை,மார்ச் 2- தாம்பரம் மாநகராட்சிக்குள் மாடம் பாக்கம் பெரிய ஏரி உள்ளது. பொதுப் பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, சுமார் 256 ஏக்கர் பரப்பளவு கொண் டது. இந்த ஏரிக்கு சேலையூர் ஏரி, திருவாஞ்சேரி ஏரி வழியாக நீர்வரத்து உள்ளது. இந்த நீர்வரத்து பாதை கள் பெரும்பாலும் குறுக்கப்பட்டு குடி யிருப்புகளாக மாற்றப்பட்டு விட்டது. தனியார் மனைப்பிரிவுகளால் மாடம் பாக்கம் ஏரியின் பரப்பு 100 ஏக்கர் அளவுக்கே உள்ளது. இந்த ஏரியை சுற்றி சுமார் 70 ஆயிரம் பேர் வசிக் கின்றனர். மாடம்பாக்கம் ஏரியை நீராதார மாகக் கொண்டு சிட்லபாக்கம் பகுதிக்கு 16 லட்சம் லிட்டர், மாடம்பாக்கம் பகுதிக்கு 4 லட்சம் லிட்டர் வழங்கும் குடிநீர் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மேலும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி உள்ளது. இருப்பினும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரி யில் விடப்படுகிறது. குப்பை கழிவு கள் கொண்டு வந்து கொட்டப்படு கிறது.
இதனால் ஏரி மாசடைந்தது. இத னால் குடிநீர் விநியோகம் நிறுத்தப் பட்டது. இது தொடர்பான வழக்கை விசா ரித்த பசுமை தீர்ப்பாயம் நீரின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ய ஒன்றிய, மாநில மாசுக்கட்டுப் பாடு வாரியங்களுக்கு உத்தரவிட்டது. அந்த ஆய்வில் 5 இடங்களில் கழிவு நீர் கலப்பதும், டிடிஎஸ் அளவு ஒரு லிட்ட ரில் 2 ஆயிரம் மி.கி வரை (அனுமதிக் கப்பட்ட அளவு 500 மி.கி.) உள்ளதும் தெரியவந்தது. இந்த நிலையில் ஏரிப்பாதுகாப்பை வலியுறுத்தி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பேசிய சென்னை ஐஐடி சுற்றுச்சூழல் பேரா. இந்துமதி எம்.நம்பி “மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்ப தால் ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டது. பொட்டாசியம், பாஸ்பேட் அளவு அதிகமாகிவிட்டது. இதனால் ஆகாய தாமரை வளர்கிறது. நிலத் தடி நீர், நீர்வாழ் உயிரினங்கள், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது” என்றார். இது தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பில் அதிகாரி களிடம் பலமுறை முறையிட்ட பிறகும் ஏரியை பாதுகாக்கவும், கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்புகளை தடுக்க வும் போதிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்று தெரிவிக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு
இத்தகைய சூழலில், மாடம்பாக் கம் ஏரியை ஆக்கிரமித்தும், நீர்வரத்து கால்வாய்களை மறித்தும் தனியார் கட்டுமான நிறுவனம் மனைபிரிவு ஒன்றை உருவாக்கி உள்ளது. பல்வேறு நகர்களில் இருந்து வரும் வெள்ளத்தை ஏரிக்குள் கொண்டு செல்ல 3 அடி அகலமுள்ள கால் வாயை அமைத்துள்ளது. ஏரிக்குள் அமைக்கப்பட்டு வரும் மனைப் பிரிவை அகற்ற வேண்டும் என வலி யுறுத்தி மாடம்பாக்கம் ஏரிப் பாதுகாப்பு குழு கையெழுத்து இயக்கம் நடத்தி யது. அதை தலைமை செயலாளர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அளித்ததது. இதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறையினர் வீட்டுமனை பகுதியை ஆய்வு செய்தனர். ஆரம்ப நிலை அனுமதி மட்டுமே உள்ளதை வைத்து பணிகளை நிறுத்த உத்தர விட்டனர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாதுகாப்பு சங்கம் கூறுவதென்ன?
நீர்நிலைகளை பராமரிப்பதும் பாது காப்பதும் தமிழ்நாடு அரசின் கொள்கை களில் ஒன்றாக அவ்வப்போது அறிவிக்கப்படுகிறது. தாம்பரம் மாநக ராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளிலேயே மாடம்பாக்கம் ஏரி தான் மிகப்பெரியது. இந்த ஏரி தொடர் பாக மாநகராட்சியும் பொதுப்பணித் துறையும் அவ்வப்போது சில அறி விப்புகள், நிதி ஒதுக்கீடுகளை அறி விக்கின்றன. இருப்பினும் போதிய பராமரிப்பு இன்றி ஏரி பாழ்பட்டு வருகிறது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஏரியை ஒட்டிய நிலப்பரப் பில் விதிகளுக்கு புறம்பாக தனியார் நிறுவனம் வீட்டுமனைகளை போட்டுள் ளது.
அந்த மனைகள் விற்பனைக்கு தயாராகிக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, ஏரியின் வடக்குப் பகுதி யிலும், தெற்குப் பகுதியிலும் சுவர் எழுப்பியுள்ளனர். தெற்குப்பகுதியில் கட்டப்பட் டுள்ள சுவற்றுக்கும் ஏரிக்கும் இடை யில் அரசு விதிகளின்படி இடைவெளி விடாமல் உள்ளது. வடக்குப் பகுதி சுவரினால் அருகிலுள்ள ஏஎல்எஸ் நகர், பார்வதி நகர், ராதா நகர், காந்தி நகர், யஷ்வந்த் நகர், திருமலை நகர், பத்மாவதி நகர், மல்லீஸ்வரி நகர், ஜல்வாயு விஹார் ஆகிய பகுதிகளில் இருந்து ஏரிக்குள் செல்லும் மழை நீர் கால்வாய்கள் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. மழைநீர் ஏரிக்குள் சென்றிட முறை யான ஏற்பாடு எதுவும் மனை விற்பனை யாளர்களால் செய்யப்படவில்லை.
டி.கே.ரங்கராஜன் ஆய்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் ஞாயிறன்று (பிப்.2) மாடம்பாக்கம் ஏரி, தனியார் கட்டுமான நிறுவனத்தின் மனைப்பிரிவுகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகளிடம் கலந்தாலோசனை நடத்தினார். அப்போது பேசிய நலச்சங்க நிர்வாகிகள், ஏரிப் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் கங்காதரன், கிருஷ்ணன், சங்கரநாராயணன் உள்ளி ட்டோர் பேசினர். “தனியார் கட்டுமான நிறுவனம் ஏரிக்குள்ளேயே மனை அமைத்துள்ளது. ஏரிக்கு நீர் செல்லும் பாதையை தடுத்து மனைப்பிரிவை அமைத்துள்ளனர். ஏரியின் மட்டத்தி லிருந்து 5 அடி உயரத்திற்கு மேடாக்கி யுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் வெள்ளம் வடியாமல் யஷ்வந்த் நகர் உள்ளிட்ட பகுதிகள் மூழ்கும். குடியிரு ப்புக்கும் ஏரிக்கும் இடையே 15 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அதை யும் மீறி இந்த மனைப்பிரிவு அமைக்க ப்படுகிறது. ஈர நில விதிமுறைகளை பின்பற்றாமல் தனியார் நிறுவனம் செயல்படுகிறது.
எனவே, இதனை தடுக்க வேண்டும் என்று கோரினர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ்.மோகன், செயலாளர் எம்.தங்க ராஜ் உள்ளிட்டோர் வழங்கிய மனுவை யும் பெற்றுக் கொண்டு பேசிய டி.கே. ரங்கராஜன், “வளர்ச்சி திட்டங்கள் வரவர நீர்நிலைகள் அழிக்கப்படு கிறது. இத்தகைய திட்டங்களுக்கு அதி காரிகள்தான் அனுமதி அளிப்பவர் களாக இருக்கிறார்கள். ஏரியை பாது காப்பது பிரமுகர்கள், தனிநபர்களின் வேலை மட்டுமல்ல. அதை பொது மக்களின் இயக்கமாக மாற்ற வேண்டும். தலைமைச் செயலாளரையும், துறைச் செயலாளரையும் சந்தித்து பேசுங்கள். நீதிமன்றத்தையும் அணுக முயற்சியுங்கள். இந்தப் பிரச்சனையில் அரசியல் ரீதியாக சிபிஎம் தலையீடு செய்யும்” என்றார். இந்நிகழ்வின்போது சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பி னர் ச.லெனின், தாம்பரம் பகுதிக்குழு உறுப்பினர் ஜெயவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- செ.கவாஸ்கர்
ஏரியின் அருகில் உள்ள நகர்களின் உருவாகும் கழிவுநீர் ஏரியில் விடப்படுகிறது. கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் கோருகிறது.
- சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளை பாதுகாக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும்.
- மாடம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியை புதியதாக சர்வே செய்து பாதுகாக்க வேண்டும்.
- நீர்வரத்து கால்வாய் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காமல், ஏரிக்கு தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து மறு சுழற்சி செய்ய வேண்டும். ஏரியில் கழிவுநீர் கலக்காத நிலையை உருவாக்க வேண்டும்.
- ஏரிப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
- ஏரியைச் சுற்றி உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் (எஸ்டிபி) நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏரியின் ஊற்றுக்கண் கண்டுபிடித்து அந்த அளவிற்கு (சுமார் 3.50 அடி) ஏரி முழுவதும் தூர்வார வேண்டும்.
- ஏரியை ஆழப்படுத்துவதால் கிடைக்கும் மண் முழுவதையும் கொண்டு ஏரியின் கரைகளை பலப்படுத்த வேண்டும். மண்ணாலான நடைபாதை அமைத்து, மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.
- ஏரிக்கரையை பலப்படுத்த பனை விதைகளையும், ஏரி நீரை நன்னீராக மாற்ற அனைத்துப் பக்கங்களிலும் வெட்டிவேரும் நட வேண்டும்.
- ஏரியை பாதுகாத்து பராமரிக்க அரசு முன்வருமா?