கடலூர்,ஆக.6 - ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டு சுடுகாட்டு சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிடிஓ அலுவல கத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளக்கப்பாடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தக்கூடிய சுடு காட்டிற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக போடப் படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு மனு கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலா ளர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார். சிபிஎம் விருத்தா சலம் வட்ட செயலாளர்ஆர்.கலைச்செல்வன்,வி.தொ.ச நிர்வாகி குமார், கிளை செய லாளர்கள் பெசு.வீரா, ஜி.தமிழ் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.