சென்னை, பிப். 17 – விகடன் இணையதளத்தை முடக்கிய ஒன்றிய அரசை கண்டித்து உரிமைக்குரல் எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை காவல்துறையினர் அடா வடியாக கைது செய்தனர். அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை விலங்குகளைப்போல கை, கால்களில் விலங்கிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு நாடு கடத்துகிறது. மனித உரிமை மீறலை, இந்திய மக்களை அவ மதிக்கும் அமெரிக்காவை ஒன்றிய அரசு கண்டிக்கவில்லை. மாறாக, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்கி வருகிறது. இதனை விமர்சிக்கும் வகையில், சிரித்துக்கொண்டிருக்கும் டிரம்ப் முன்பு, இருக்கையில் மோடியின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பது போன்று விகடன் இணையதளத்தில் கேலிச்சித்திரம் வெளியிட்டது. இதனையடுத்து விகடனின் இணையதளத்தை பிப்.15 அன்று ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முறையற்ற முறையில் முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ‘உரிமைக்குரல் எழுப்பும்’ போராட்டத்தை அறிவித்தது. இதன்படி 50க்கும் மேற்பட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, போக்குவரத்துக்கு இடையூறின்றி ஒன்றிய அரசுக்கு முழக்கமிட்டனர். இதனையடுத்து அனைவரையும் கைது செய்வதாக காவல்துறை அறிவித்தது. இதனால் தள்ளுமுள்ளு, மறியல் நடந்தது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “குற்றவாளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது விலங்கிடக் கூடாது என்பது இந்தியாவில் உள்ள விதி. உலகின் பல சிறிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் ஒன்றிய அரசு அமெரிக்காவுக்கு அடிமை நாடுபோல் நடந்து கொள்கிறது. இந்தியாவில் முதன்முறையாக, கேலிச்சித்திரத்தை அறிமுகப்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சியை விமர்சித்தவர் பாரதி யார். ஒரு ஊடகவியலாளர் வெளியிட்ட செய்தி, கருத்துசித்திரம், கேலிச்சித்திரம், துணுக்கு செய்தி, புகைப்படத்திற்காக கைது செய்தால், முடக்கினால் அதற்கெதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராடும். கலை, இலக்கியவாதிகள், ஊடக வாதிகள், ஜனநாயக வாதிகள் சுதந்திரமாக செயல்பட செங்கொடி இயக்கம் என்றும் துணை நிற்கும். விகடன் இணையதளம் முடக்கப் பட்டுள்ளதற்கு முதலமைச்சரும் கண்ட னம் தெரிவித்துள்ளார். ஆனால், பத்திரி கையாளர் சுதந்திரத்திற்காக போராடினால் காவல்துறை கைது செய்கிறது. இது என்ன நியாயம் என்று வினவினார் செல்வா. இந்தப்போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. முருகேஷ், இ.சர்வேசன், வே.ஆறுமுகம், எஸ்.வி.வேணுகோபாலன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.