காஞ்சிபுரம், ஜூன் 9 - காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரி கரையை பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். சிக்கராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்ப வர்கள் என இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் குன்றத்தூர் மெயின் ரோட்டிலிருந்து பூந்தமல்லி வெளிவட்டச் சாலைக்கு சென்று வர இந்த கல்குவாரி கரையை பயன்படுத்து வருகின்றனர். தற்போது கடந்த 4 தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பொழிந்தது அதில் கரையின் மேல் உள்ள 5 மின்கம்பங்களில் 2 மின்கம்பங்கள் சாய்ந்து அபாயகரமான நிலையில் உள்ளது. மற்ற மூன்று மின்கம்பங்கள் பலம் இழந்து சிதைந்துள்ளது. இந்நிலையில் இந்த கம்பங்களை மறு சீரமைத்து தர வேண்டும் என பகுதி மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.