கள்ளக்குறிச்சி. அக்,19- செய்தி மக்கள் தொடர் புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொது மக்கள் பார்வையிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் ஈரியூர் கிராமத் தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ் நாடு அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த புகைப்பட கண்காட்சியில் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்பு களையும், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வு கள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளை பொதுமக்கள் பார்வை யிட்டனர்.