districts

img

வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்தவர் கைது

அம்பத்தூர், நவ. 9- வளசரவாக்கத்தில் வீட்டில் 165 கிலோ குட்கா பதுக்கி வைத்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை வளசர வாக்கம் கைக்காங்குப்பம் பாரதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து, மோட்டார் சைக்கி ளில் கடைகளுக்கு சப்ளை செய்வதாக காவல் துறை யினருக்கு  ரகசியத் தக வல் கிடைத்தது. அதன்பேரில் வளசர வாக்கம் காவல் துறையி னர் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி னர்.  சோதனையில் அந்த வீட்டில் 165 கிலோ குட்கா பொருட்கள், ஹான்ஸ், கூல் லிப் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த அன்பழகன் (54) என்பவரை கைது செய்து, அங்கிருந்த போதைப் பொருட்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட அன்பழகனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.