districts

img

அரிய வகை நோயால் குழந்தை பாதிப்பு: உதவி கோரும் பெற்றோர்

வேலூர்,  ஜூலை 8 - வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் சந்தை மேடு பகுதியை சேர்ந்தவர்கள்  சிவ வேணி மைந்தன்- மாலதி. இவர்களது மகன் லக்சன் இரண்டரை வயது ஆகிறது. இக்குழந்தைக்கு ஒரு வயது 2 மாதம் இருக்கும் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதையடுத்து, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்து வர்கள் பரிசோதித்த போது குழந்தைக்கு ஜெனிடிக் டிசார்டர் வகையான ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு) என்ற மிக அரிதான தசை நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான மருந்து வெளிநாட்டில் இருந்து தான் வர வைக்க வேண்டும். இதற்கு ரூ.16 கோடி செலவாகும் என மருத்துவர்கள் கூறி யுள்ளனர்.  இந்நிலையில் குழந்தையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறைதீர் மனு நாளில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் மகனுக்கு வந்துள்ள அரிய நோயால் நாங்கள் துன்பப்பட்டு வருகிறோம்.  ஒரே ஊசி ரூ.16 கோடி என்கிறார்கள். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை ஒரு வருடமாக அலைந்து வருகிறோம். தற்போது எங்கள் மகனால் உட்கார கூட முடியாது, குனிந்து அமர்வதால் நுரையீரல் அழுத்தப்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்படு கிறான். உணவு உண்பதற்கும் சிரமமாக இருக்கிறது. அதை அப்படியே விட்டு விட்டால் நாளடைவில் உடல் உறுப்பு கள் பாதிக்கப்படும். இன்னும் 4 மாதங்க ளுக்குள் அந்த ஊசியை எங்கள் மகனுக்கு செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.  முதல்வரின் தனிப்பிரிவுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சரிடம் உதவி கேட்டு இருக்கிறோம். மேலும்மூ “CROWD FUND” மூலம் பொது மக்களின் உதவியையும் எதிர்பார்க்கிறோம். அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் எங்களுக்காக எங்கள் மகனுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று குழந்தையின் தாய்  கண்ணீர் விட்டு அழுதார். இதனால் ஆட்சியர் அலுவ லகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.