உலக சுற்றுலா தினம் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் ஒரு நாள் சுற்றுலா பயணத்தை வேலூர் ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன் வேலூர் கோட்டையில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அலுவலர் (பொ) இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.