districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் கொளத்தூர்  புதிய தாலுகா உதயம்

சென்னை, ஆக.29- சென்னை மாவட்டத்தில் தண்டையார்பேட்டை, அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், வேளச்சேரி, மதுர வாயல், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆலந்தூர்,  மாதவரம், அம்பத்தூர் என மொத்தம் 16 தாலுகாக்கள்  உள்ளன. அதில் அயனாவரம் தாலுகாவில் உள்ள கொளத் தூரை பிரித்து புதியகொளத்தூர் தாலுகா உருவாக்க தமிழக  அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு செயலாளர் ராஜராமன் வெளி யிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- கொளத்தூரை தலைமையிடமாக கொளத்தூர் என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கொளத்தூர் மற்றும் பெரவள்ளூர் அதன் பகுதிகளான சிறுவள்ளூர், சின்ன செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளது.  அதேபோல், இனி அயனாவரம் தாலுகாவில் கொன்னூர்  அதன் பகுதிகளான மல்லிகைச்சேரி, மற்றும் அயனாவரம் அதன் பகுதிகளான அயனாவரம் பகுதி-1 மற்றும் பகுதி-2 ஆகியவை இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூரில் புதிய அரசு பணியிடங்களுக்கு தோற்று விக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. இந்த கொளத்தூர் தொகுதி முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற தொகுதியாகும்.

மின்வாரிய ஓய்வூதியர் ஆண்டு பேரவை

சென்னை, ஆக. 29 - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மத்திய சென்னை கிளையின் 17வது  ஆண்டு பேரவை செவ்வா யன்று (ஆக.27) சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்றது. கிளைத்தலைவர் அண்ணாமலை தலைமை யில் நடைபெற்ற இந்த பேர வையில் மாநில துணைப்  பொதுச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், வடக்கு மண்டலச் செய லாளர் எஸ்.கணேசன், மாநில நிர்வாகிகள் ஆர்.ராம நாதன், கே.நடராஜன், வசுமதி, என்.வீரமணி உள்ளிட்டோர் பேசினர். கிளையின் தலைவராக அண்ணாமலை, செயலாள ராக எஸ்.சுந்தர்ராஜன், பொருளாளராக இ.ராஜ சேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேசிய விளையாட்டு தினப் போட்டிகள்

சென்னை, ஆக. 29- இந்தியாவின் புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தியான்சந்த் பிறந்த நாளாகிய ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த நாளையொட்டி, சென்னையில் பாதுகாப்பு அமைச்சக கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டி கள் நடத்தப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தலைமை வகித்தார். சர்வதேச கைப்பந்து போட்டிகளுக்கு இந்திய அணியில் இடம்பெற்ற பிரபல விளையாட்டு வீரர் மோகன் உக்கிர பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

2,372 வாக்குச் சாவடிகள்:  திருவண்ணாமலையில் ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை, ஆக. 29- திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலை வர் பாஸ்கர பாண்டியன்  தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவு ரைகளுக் கிணங்க, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடியில் 1500 -இக்கு அதிகமான வாக்காளர்கள் இருப்பின் அதை இரண்டாக பிரித்து புதிய வாக்குச் சாவடியை ஏற்படுத்துதல், தேவைப்படின் வாக்குச் சாவடியை மாற்றம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடியின் பெயர் மாற்றம் செய்தல் பணி நடைபெற உள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தற்போது உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையின் விவரம் வருமாறு, செங்கம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச் சாவடிகள், திரு வண்ணாமலையில் 296 வாக்குச் சாவடிகள், கீழ்பென்னாத்தூர் 285 வாக்குச் சாவடிகள், கலசப்பாக்கம் 281 வாக்குச் சாவடிகள், போளூர் 285 வாக்குச் சாவடிகள், ஆரணி 311 வாக்குச் சாவடிகள், செய்யார் 311 வாக்குச் சாவடிகள், வந்தவாசி (தனி) 280 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 2,372 வாக்குச் சாவடிகள் உள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், வாக்காளர் பதிவு அலுவலர்கள், வரு வாய் வட்டாட்சியர் கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சாலை விபத்தில் சிக்கிய  இருளர் இன மக்களுக்கு நிவாரணம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை, ஆக. 29-  ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 19 பேர், கடந்த சனிக்கிழமையன்று (ஆக. 24 திருபெரும் புதூர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதி யில் இயங்கி வரும் யுகேபி எலக்ட்ரிகல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். தொழிற்சாலை நிர்வாகம் தனது சொந்த வாகனத்தில் அழைத்து சென்றது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் தாலுகா திருப்பனமூர் பகுதியில் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில், கலவை வட்டம், செங்கனாவரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் முருகன் சம்பவ இடத்தில் உயிரி ழந்தார். படுகாயமடைந்தவர்கள் காஞ்சி புரம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இந்த தகவலை அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச்செயலாளர் சி. சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.நேரு, ராணிப்பேட்டை மாவட்டக் குழு உறுப்பி னர் பி. ரகுபதி, கே. சேகர், கலவை தாலுகா குழு செயலாளர் எஸ். கிட்டு ஆகி யோர் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இருளர் இன பழங்குடி மக்கள் அன்றாட கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 19 இருளர் இன மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உயர் சிகிச்சைக்கு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் கோப்பை போட்டி:  விழிப்புணர்வு நிகழ்ச்சி 

கடலூர், ஆக. 29- தேசிய விளையாட்டு விழா மற்றும் முதலமைச்சர் கோப்பை போட்டியை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  இதையடுத்து கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் 4,500 மாணவர்கள் சேர்ந்து ‘சி.எம். டிராபி, பெரியார் அரசு கல்லூரி’ என்ற வடிவத்தில் அமர்ந்து முதலமைச்சர் கோப்பை போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  தொடர்ந்து முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ப தற்காக முதல் கட்டமாக 450 மாணவ- மாணவிகள் முன்பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள், விளையாட்டு துறை இயக்குநர்கள் மற்றும் பேராசி ரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.