மணலி பாடசாலையில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளிக்கு ரூ1.90 கோடியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், சென்னை வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.